Friday, December 23, 2016

  மனைவி ஊருக்குப் போயிருந்தபோது ஒருவர் எழுதிய கவிதை..



“தவிப்பு..”


வருடத்திற்கு ஒரு முறை
இரண்டு வாரம்
தாய் வீடு போகிறாய்...


பிள்ளைகள் இல்லாமல்
பொலிவிழந்து களையிழந்து
காணப்படுகிறது வீடு...


காபி போட அடுப்பில்
பால் வைத்தால் பாதி
பொங்கி வழிந்து விடுகிறது..


வீட்டைப் பெருக்கிய
இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது...


செலவிற்குப் பயந்து
சமைக்க ஆரம்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது..


இரு மடங்கு விலை வைத்தும்
சொத்தைக் காய்கறிகளை.. பழங்களை
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்...


முரட்டுத்தனமாய் அடித்து
கசக்கிப் பிழிந்து துவைத்தால்
கிழிந்து விடுகிறது துணி...


தண்ணீர்.. மோட்டார்.. டி வி
போட்டால் அணைக்காமல்
தூங்கி விடுகிறேன்...


கதவைப் பூட்டாமலேயே
சமயலறை எரிவாயுவை
அணைக்காமலேயே
வெளியில் கிளம்பி விடுகிறேன்..


தயிருக்கும் இட்லி மாவிற்கும்
வேறுபாடு தெரியவில்லை..


இப்படியாகத் தனிமையில்
தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன்
கூசாமல் பொய் சொல்கிறேன்...


“இன்னும் ஒரு வாரம்
இருந்து விட்டு வரலாமே...
நான் ஜாலியாக இருக்கிறேன்...”
என்று.....;



                               யரோ  ஒருவர் எழுதியது 


ஆயிரம்
முத்தங்கள் கேட்டேன்
அவளிடம்.......

அவளோ
ஒரு நிபந்தனை விதித்தாள்
என்னிடம்........

நிபந்தனை
என்னவோ

துள்ளிவரும்
காளையை அடக்க வேண்டுமோ?

ஊர்  எல்லை
இளவட்ட கல்லை தூக்க வேண்டுமோ?

சமுத்திரத்தை
நீந்தி கடக்க வேண்டுமோ?

காற்றை பிடித்து
காண்பிக்க வேண்டுமோ?

மதம் கொண்ட யானையிடம்
சண்டை இட வேண்டுமோ?

வில்லை
வளைக்க வேண்டுமோ?

வானத்தை
கிழிக்க வேண்டுமோ?

வைகுண்டத்தை
காண வேண்டுமோ?

என்றேன் அவளிடம்....

அவளோ
இல்லை இல்லை
ஒரு ஆயிரத்திற்கு மட்டும்
சில்லறை வாங்கி கொடு
என்றாள் என்னிடம்.....

நானோ
மறந்துவிட்டேன்

அவளிடம்
கேட்ட முத்தத்தை அல்ல.

அவளிடம்
கொண்ட காதலை................



(கொஞ்சமாவாடா நிக்குது  பேங்க்ல கூட்டம்);

     மனதைக் கவர்ந்த நல்ல பதிவு  குட்டி குட்டி விஷயங்கள்

                       தொட்டு மனதோடு விளையாடும்


*சில அருமையான விஷயங்கள்*

💠வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது *"மரம்...."*  வெட்டுங்கள் - மழை நீரை சேமிப்பேன் என்கிறது *"குளம்..........."*

💠ஆன்லைனில் கிடைக்கும் அன்பும் ஆன்ட்ராய்ட் போனில் இருக்கும் சார்ஜும் அதிகம் நீடிப்பதில்லை..

💠தோசைகளின் எண்ணிக்கையை *சட்னியின் தரமே* தீர்மானிக்கிறது.

💠கல்வி கற்க புத்தகங்களை விட *நோட்டுக்களே*அதிகம் தேவைப்படுகின்றன.!

💠நம்மை நிராகரிக்கப்படும் இடத்தில்.. நம் கோபத்தை காட்டுவதை விட சிரித்த முகத்தை காட்டுவதே மிகச்சிறந்த பதிலடி..

💠பழகிய மிருகங்களிடம் இருக்கும் பாசம் கூட சில மனிதர்களிடம் இல்லை!

💠காரணமே இல்லாமல் சோகமாக இருப்பது ஒரு சாபம். காரணமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பது ஒரு வரம்.

💠திருக்குறளை... வாழறதுக்காக படிச்சவங்கள விட..! "ரெண்டு மார்க்" வாங்குறதுக்காக படிச்சவங்க'தா அதிக பேரு..!

💠அனுபவத்தை எந்த ஆசிரியராலும் கற்றுக்கொடுக்க முடியாது! அதற்கு 
*பல தோல்விகளும்,*
*சில துரோகிகளும்* தேவை!!

💠Money மட்டுமே மதிக்கப்படுகிறது... *மனிதம்*பலரால் மிதிக்கப்படுகிறது..

💠நம்மை நிர்ணயிக்கும் இரண்டு விசயங்கள் :- 
நம்மட்ட ஒன்னும் இல்லனு தெரிஞ்சும் நம்மோட பொறுமை..! 
எல்லாம் இருக்கும் போது நம்மோட நடத்தை..!

💠எப்பொழுதும் திரையரங்குகள் மீது எனக்கு இனம் புரியா மரியாதை 
உண்டு...!! எளியவர்களை முன் இருக்கைகளில் அமர வைத்து அழகு பார்க்கும் ஒரே இடம்...!!!

💠எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அழுது கொள்ளுங்கள் ஆனால் மீண்டும் அதே காரணத்திற்காக மட்டும் அழக்கூடாது.

💠கார்ட்டூன் சேனலில் இருந்து கிரிக்கெட் சேனலுக்கு மாறி தான் வளர்வதை அவனையும் அறியாமல் எனக்கு உணர்த்துகிறான் என் மகன்!!!

💠பலூன் வியாபாரியின் மூச்சுக் காற்றில் தான் அவன் குடும்பமே உயிர் வாழுகிறது!!

💠பணம் மரத்தில் காய்க்குமானால் மனிதன் கோடாறிக்கு பதிலாக ஏணியை தேர்வு செய்திருப்பான்... 

💠நாம மேல ஏற ஏற கீழ இருப்பவர்கள் சிறிதாய் தெரிய ஆரம்பித்தால், 'தன்னடக்கம்' என்னும் கண்ணாடி அணிந்து கொள்வது அவசியம். உணர்ந்தவன் உயர்வான்!!

💠லாரியில அழுது கொண்டே சென்றது..... ஆற்றிடமிருந்து பிரிந்த மணல்.......!!!




 💞ஆயிரம்
முத்தங்கள் கேட்டேன்
அவளிடம்.......

💞   அவளோ   ஒரு   நிபந்தனை   விதித்தாள்  என்னிடம்........

💞   நிபந்தனை  என்னவோ.......? 

💞துள்ளிவரும்  காளையை  அடக்க  வேண்டுமோ.....?

💞ஊர்  எல்லை  இளவட்ட கல்லை  தூக்க  வேண்டுமோ...?

💞சமுத்திரத்தை   நீந்தி  கடக்க  வேண்டுமோ...?

💞காற்றை பிடித்து   காண்பிக்க வேண்டுமோ...?

💞மதம் கொண்ட யானையிடம்   சண்டை இட வேண்டுமோ...?

💞வில்லை  வளைக்க  வேண்டுமோ.....?

💞வானத்தை   கிழிக்க வேண்டுமோ...?

💞வைகுண்டத்தை   காண வேண்டுமோ..?  என்றேன் அவளிடம்....😁😁😁

💖💖அவளோ.......   இல்லை இல்லை  

💖ஒரு ஆயிரத்திற்கு மட்டும்  சில்லறை வாங்கி கொடு  என்றாள் என்னிடம்.....   நானோ   மறந்துவிட்டேன்....😰😰

💖அவளிடம்   கேட்ட முத்தத்தை அல்ல....😰😰

💖அவளிடம்  கொண்ட காதலை................🌸


 புதுசா வர்ற ரூபாய் நோட்கள்ல காந்தி படத்துக்கு இணையாக,எதற்காக மங்கள்யான் விண்கலத்தின் படத்தை வைக்க வேண்டும்?அப்படி என்ன சாதனை செஞ்சது மங்கள்யான்?


சுருக்கமாக நான்கு காரணங்கள்.

1.Escape Velocity-பூமியின் புவியீர்ப்பு விசையை சமாளித்து,பூமியின் வளிமண்டலப் பரப்பை விட்டு வெளியேற ஒரு பொருள் பயணிக்க வேண்டிய வேகத்தின் அளவு.தமிழில் விடுபடு திசைவேகம்.இது 11.2 கி.மீ/செகன்ட் என இருக்க வேண்டும்.இந்த அளவை விட அதிகமான வேகத்தில் ஒரு பொருள் பூமியை விட்டு வெளியே பயணித்தால் அது காற்றின் உராய்வினால் தீப்பற்றி எரிந்து விடும்.குறைவான வேகமாக இருந்தால் பூமியைத் தாண்டவே முடியாது.பூவியீர்ப்பு விசை கீழே பிடித்து இழுத்துவிடும்.இறந்த பின் எஸ்கேப் வேலிசிட்டி வேகத்தை அடைய முடியாத ஆன்மாக்கள் தான் பூமியை விட்டு வெளியேற முடியாமல் பேய்-பிசாசுகளாக முருங்கை மரத்திலோ-புளியமரத்திலோ திரியும்ன்னு கூட சொல்லலாம்.
ஆனால் மங்களயான் எஸ்கேப் வேலாசிட்டி வேகத்தில் அனாயசமாக கடந்து சென்றது.இது வரை அனுப்பப்பட்ட செயற்கைகோள்களும்,ராக்கெட்களும் இதைக் கடந்து தானே சென்றன? 
ஆம்.இதுவரையில் அனுப்பப்பட்ட அத்தனை செயற்கைகோள்கள் மற்றும ராக்கெட்களின் எடைகள் எல்லாம் பல நூறு கிலோக்களுக்கு மேல் இருந்தன.ஆனால் மங்கள்யானின் எடை வெறும் 15 கிலோ மட்டுமே.இவ்வளவு எடைக்குறைவான ஒன்றை பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி அனுப்புவது சாதாரண வேலை அல்ல.திறமையான டிசைன் வேண்டும்.உச்சபட்ச தொழில் நுட்பம் வேண்டும்.நம் விஞ்ஞானிகள் இதைச் செய்தார்கள்.

2.செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பதென்றால் ஒரு ராக்கெட்டை எடுத்து வான்வெளியில் செவ்வாய் கிரகம்  இருக்கும் திசையைப் பார்த்து அனுப்புவதல்ல.அதற்கு ஏகப்பட்ட கணக்கீடுகளைச் செய்ய வேண்டும்.
சூரியக்குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும்-ஒவ்வொரு வேகத்தில்,ஒரு நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வரும்.செவ்வாயின் வேகம் வேறு.பூமியின் வேகம் வேறு.நீள்வட்டப்பாதையிலேயே ஒவ்வொரு கோளும் சுற்றுவதால் ஒரு ஒவ்வொரு கோளும்-தன் பக்கத்திலுள்ள கோளுக்கு-ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மிக அருகே வரும்.அந்தப் புள்ளியை Perigee என்பார்கள்.அப்படி செவ்வாய்க்கும்-பூமிக்குமிடையிலான அந்த Perigee க்கணக்கிட்டு,அந்தப் புள்ளியில் ராக்கெட்டை அனுப்ப வேண்டும்.இல்லாவிட்டால் செவ்வாயின் தூரம் கூடும்.செலவும் எகிறும்.அதோடு செவ்வாயின் சுற்று வேகத்தில் கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.
நம் ஆனால் நம் விஞ்ஞானிகள் Perigee யை துல்லியமாகக் கணக்கிட்டு மங்கள்யானை கொண்டு சென்றார்கள்.செவ்வாயின் சுற்று வேகத்தில் அதன் சுற்றுவட்டப் பாதையில் மங்கள்யானைச் சுற்றச் செய்தார்கள்.

3.அப்படி செவ்வாயைச் சுற்றச் செய்யும் போது-மங்கள்யானின் கிரையோஜனிக் என்ஜின்களை பூமியிலிருந்து தான் இயக்க வேண்டும்.இங்கே தான் ஒரு சவால்.பூமியில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் மங்கள்யானைச் சென்றடைய 12 நிமிடங்களாகும்.மங்கள்யானிடமிருந்து பதில்கள் வரவும் இதே 12 நிமிடங்கள் தேவைப்படும்.ஆக அடுத்த 12 நிமிடங்கள் கழித்து மங்கள்யான் எப்படி இயங்க வேண்டும் என்பதை இப்போதே தீர்மானிக்க வேண்டும்.ஒரு கட்டளையைப் பூமியில் இருந்து அனுப்பினால்,அது 12 நிமிடங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான விளைவுகளை உண்டாக்கும் என்று இந்தக் கணத்திலேயே தீர்மானிக்க வேண்டும். அது எவ்வளவு சவாலான பணி!!அதையும் நம் விஞ்ஞானிகள் செய்து முடித்தார்கள்.

4.இந்த துல்லியப் பணிகளை எல்லாம் நம் விஞ்ஞானிகள் தங்களது எத்தனையாவது முயற்சிகளில் செய்தார்கள் தெரியுமா? 
முதல் முயற்சியில்...  ஆம் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்தார்கள்.
ஆனானப்பட்ட அமெரிக்காவே செவ்வாய் பயணத்தை 51 முறைகள் முயற்சி செய்து அதில் 21 முறைகளே வெற்றியடைந்தது.இந்தியா தன் முதல் முயற்சியிலேயே-சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து-அடித்த அந்த பந்து ஸ்டேடியத்தைத் தாண்டியது.ஆம்.அப்படிப்பட்ட நெத்தியடியாக அமைந்தது,"மங்கள்யானின்" பயணம்.

5.இவற்றிக்கெல்லாம் மேலாக இருந்தது மங்கள்யான் திட்டத்மிற்கான செலவு தான்.அமெரிக்கா செவ்வாய் பயணத்திற்குச் செய்த செலவை வைத்து இந்தியாவின் பொது பட்ஜெட்டையே முடித்து விடலாம்.ஆனால் மங்கள்யான் திட்ட செலவு எவ்வளவு தெரியுமா? 
வெறும் 454 கோடிகளில்!!!!

இந்தியா என்றாலே பாம்புகளும்,கொசுக்களும் நிறைந்த நாடென்றும்,அழுக்கான,சாலை விதிகளைப் பின்பற்றாத நாடென்றும்,You can piss in public,But you can't kiss in public in India-என்றும் எள்ளி நகையாடியவர்களின் நெற்றியில் 4 இஞ்ச் ஆணியை இறக்கியது "மங்கள்யானின்" வெற்றி.

அமெரிக்கா,ரஷ்யா,இங்கிலாந்து,ஐரோப்பா என உலகத்தின் வல்லரசு நாடுகளின் மத்தியில் இந்தியப் பொறியாளர்களின் வல்லமையை உயரத்தில் தூக்கி வைத்தது மங்கள்யான்.அதனால் தான் மங்கள்யானுக்கு ரூபாய் நோட்டில் இடம்.

மங்கள்யான் நம் திறமையின் வெளிப்பாடு; 


 பிரபலமான ஹார்ட் சர்ஜன் ஒருவர் தன் காரை சர்வீஸ் செய்ய மெக்கானிக் ஒருவரிடம் வந்தார். காரை பழுது பார்த்த மெக்கானிக்,


"டாக்டர், நீங்கள் செய்வதையே தான் நானும் செய்கிறேன்...நானும் வால்வுகளைப் பிரிக்கிறேன்.. பாகங்களை வெட்டி ஒட்டுகிறேன்.அடைப்பை சரி செய்கிறேன்.புதிய ஸ்பேர் பார்ட்ஸ் போடுகிறேன்..நீங்களும் அதையே தான் செய்கிறீர்கள்..அப்படி இருக்கும் போது உங்களுக்கு  மட்டும் எப்படி அதிக பணம்,புகழ்?" என்று கேட்டான்.

சில வினாடிகள் மௌனம் சாதித்த டாக்டர், புன்னைகையுடன் ,"நீ சொன்ன வேலைகளையெல்லாம் வண்டி  ஓடிக் கொண்டிருக்கும் போது செய்து பார், அப்போது புரியும்!" என்றார்.

படித்ததில் பிடித்தது👆👆; 


: கணவன் ஒரு முறையும் மனைவி 100 முறையும் படிக்க வேண்டிய செய்தி (மன்னிக்கவும் உலக நடைமுறையை கூறியதற்கு):


சண்டை இல்லாத வீட்டில் லட்சுமி தங்குவாள்
பெரும் பணக்காரரான ஒரு வியாபாரியின் வீட்டில். செல்வத்திற்கு பஞ்சமில்லை. எல்லா செல்வமும் அவர் வீட்டில் கொட்டி கிடந்தது. ஒருநாள் அந்த வியாபாரியின் கனவில் தோன்றிய மகாலட்சுமி, ‘பக்தனே! நீயும் உன் முன்னோர்களும் செய்துள்ள புண்ணியங்களின் காரணமாகவே இது வரை நான் உன் வீட்டிலேயே தங்கியிருந்தேன். நீ செய்த புண்ணியம் அனைத்தும் தற்போது தீர்ந்து விட்டது.  எனவே இன்னும் ஓரிரு நாளில் உன் வீட்டை விட்டு வெளியேற உள்ளேன். அதற்கு முன் உனக்கு ஏதாவது வரம் வேண்டும் என்றால் கேட்டுப் பெற்றுக்கொள். ஆனால் என்னை இங்கேயே தங்கியிருக்கக் கேட்கக் கூடாது’ என்றாள்.
மறுநாள் பொழுது விடிந்தது. வியாபாரி வீட்டில் உள்ள அனைவரையும் அழைத்து கனவில் நடந்தவற்றைக் கூறினார். மகாலட்சுமியிடம் என்ன வரம் கேட்கலாம் என்று அவர் தம் குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆலோசனை கூறினர்.
ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே கருத்தையே வெளிப்படுத்தினர். ‘நவ ரத்தினங்களை வரமாக கேளுங்கள்; ஏராளமான பொற்குவியல்களை கேளுங்கள்; நிறைய உணவு பொருட்களை கேளுங்கள்; மாட மாளிகைகள் பலவற்றை கேளுங்கள்’ என்று அடுக்கிக் கொண்டே போனார்கள்.
அப்போது அந்த வீட்டின் கடைசி பெண் தன் தந்தையிடம், ‘அப்பா நமக்கு தேவையான பொன், வைரம், வைடூரியம், மாணிக்கம், வீடு என எவற்றை வரமாக கேட்டு வாங்கினாலும், அது நம் வீட்டில் நிலைக்கப் போவதில்லை. ஏனெனில் எப்போது நம் வீட்டில் இருந்து மகாலட்சுமி தேவி வெளியேறப் போகிறேன் என்று எப்போது கூறி விட்டாளோ, அவள் வெளியேறியவுடன் அவளது ஐஸ்வரியம் பொருந்திய இந்த பொருட்களும் வெளியேறி விடும், அல்லது நிலைக்காமல் போய்விடும்.
எனவே எப்போதும் எங்கள் வீட்டில் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்கும்படி வரம் அருளுங்கள் என்று மகாலட்சுமி தேவியை கேளுங்கள்’ என்று கூறினாள்.  இளைய மகள் கூறியதே சரி என்று வியாபாரிக்கு தோன்றியது. அதையே இறுதி முடிவாகக் கொண்டு, இரவு தூங்கச் சென்றார் வியாபாரி.
அன்றைய தினம் இரவில், அவர் கனவில் மகாலட்சுமி தோன்றினாள். அவளிடம், ‘அன்னையே! எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் எப்போதும் பரஸ்பரம் அன்பு நிலைத்திருக்க வேண்டும். இதுவே நான் உன்னிடம் கேட்கும் வரம். இந்த வரத்தை மட்டும் தாங்கள் அருளினால் போதுமானது’ என்று வியாபாரி கேட்டார்.
லட்சுமிதேவி சிரித்தபடி ‘மகனே! இப்படி ஒரு வரத்தைக் கேட்டு மீண்டும் உன் வீட்டிலேயே என்னை கட்டிப்போட்டு விட்டாய். எந்த குடும்பத்தில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பு செலுத்தி வாழ்கிறார்களோ, எந்த குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லையோ, அந்த வீட்டில் நிச்சயமாக நான் இருந்தே தீருவது என்று முடிவு எடுத்துள்ளேன். எனவே நீ கேட்ட இந்த வரத்தால் மீண்டும் நான் உன் வீட்டிலேயே தங்கி இருந்து விடுகிறேன்’ என்று கூறி அங்கேயே தங்கிவிட்டாள்.
‘எந்த வீட்டில் குடும்பத்து பெரியவர்களை, மதித்து வழிபடுகிறார்களோ, எங்கு நாகரீகமான முறையில் மற்றவர்களுடன் மரியாதையோடு பழகுகிறார்களோ, பிறருடைய செய்கையால் மனதில் கோபம் ஏற்பட்டாலும் எவர் தங்கள் வாயால் சண்டை செய்யாமல் இருக்கிறார்களோ அந்த இடங்களில் எல்லாம் நான் வசிக்கிறேன்’ என்று இந்திரனிடம் ஒருமுறை லட்சுமி கூறியதாக புராண வரலாறு தெரிவிக்கிறது. ஆகையால் லட்சுமி கடாட்சம் பெற விரும்புபவர்கள் சண்டை போடுவதைத் தவிருங்கள்.; 


 *அம்மா! அம்மா!*


*✏ 'அம்மா' சொன்ன அற்புதமான பொய்களில் ஒன்று :*
*கடைசி உருண்டையில்தான் எல்லா* 
*சத்தும் இருக்கும்,* 
*இத மட்டும்* *வாங்கிக்கோடா*
*கண்ணா!*

*✒ நாம் பெற்ற முதல் இரத்த தானம் எது தெரியுமா? நம் 'அம்மா'வின் பால்தான்*.

*✏ தன் 'அம்மா' தனக்கு* *என்னவெல்லாம்*
*செய்தாள் என்பதை, மனிதன் கடைசி வரை உணர்வதில்லை.* 
*அவன் அதை உணரும்போது*, *அவள் உயிரோடு இருப்பதில்லை.*

*✒ 'அம்மா' என் அருகில் இருந்தால், கல்பாறை கூட பஞ்சு மெத்தைதான்.*
*
*✏ சொல்ல வந்ததை சரியாக சொல்ல முடியாமல் தவித்து நின்று பார். தாய்மொழியின் அருமை புரியும். வெளிநாட்டில் இருந்து பார். தாய்நாட்டின் அருமை புரியும். இதேபோல, 'தாயை' விட்டு தள்ளி இருந்து பார். தாயின் அருமை புரியும்.*

*✒ என் முகம் பார்க்கும் முன்பே, என் குரல் கேட்கும் முன்பே, என் குணம் அறியும் முன்பே என்னை நேசித்த ஒரே மனித இதயம், என் 'அம்மா' மட்டும்தான்.*

*✏ ஓர் 'அம்மா'வின் இறுதி ஆசை. என் மண்ணறையின் மீது உன் பெயரை எழுதி வை. உன்னை நினைப்பதற்கு அல்ல, அங்கும் உன்னைச் சுமப்பதற்கு!*

*✒ என்னை நடக்க வைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட, நான் விழுந்து விடக்கூடாது என்ற கவலையில்தான் இருந்தது என் 'அம்மா' வின் கவனம்.*

*✏ நான் ஒருமுறை அம்மா என்று அழைப்பதற்காக, பிரசவ நேரத்தில் ஆயிரம் முறை அம்மா, அம்மா என்று கதறியவள்தான் என் 'அம்மா'*

*✒ குழந்தைகளின் பல்வேறு அழுகைகளின் அர்த்தம் புரிந்த ஒரே டிஸ்னரி புக், 'அம்மா' மட்டும்தான்*

*✏ தாய்மையின் வலி என்னவென்று எனக்கும் தெரியும். அதனால்தான் அன்று 'அம்மா' வுடன் சேர்ந்து நானும் அழுதேன் பிறக்கயில்*

*✒ தேங்காய் திருகும்போது, 'அம்மா' விடம் திட்டு வாங்கிக் கொண்டே சாப்பிடும் சுகமே தனி!*

*✏ அம்மா...! அப்பா, ஆடம்பரமாய் கட்டிக்* *கொடுத்த வீட்டை விட, உன் ஆடையில் கட்டித்* *தந்த அந்த (தொட்டில்)* *வீடுதான் பெரும் நிம்மதியைத் தந்தது.*
 *நோய் வரும்போது ஓய்வுக்கு பாயைத் தேடுவதை விட, என் 'தாயை'த் தேடுது மனசு*

*✏ உலகில் மிகவும் அழகான வார்த்தை எது தெரியுமா? எனக்கு 'அம்மா'! உங்களுக்கு..?*

*✒ 'அம்மா' என்பது வெறும் பெயரல்ல, மறப்பதற்கு! அது உயிரோடு கலந்த உதிரத்தின் உறவு.*

*✏ ஆயிரம் கைகள் என்* *கண்ணீரைத் துடைத்துப்*
*போனாலும், ஆறாத* *துன்பம் 'அம்மா' வின் சேலைத் தலைப்பில் துடைக்கும்போதுதான் நீங்கியது.*

*✒ கடைசி தோசை சாப்பிடும் போது, சட்னியை வேண்டும் என்றே அதிகமாக வைத்து, சட்னியை காலி செய்வதற்காக, இன்னொரு தோசை வைக்கிறதுதான் 'அம்மா'வின் அன்பு.*

*✏ நான் நேசித்த முதல் பெண்ணும், என்னை நேசித்த முதல் பெண்ணும் நீதானே 'அம்மா'!*

*✒ மண்ணறையில் உறங்கச் சொன்னால் கூட, தயங்காமல் உறங்குவேன். 'அம்மா', நீ வந்து ஒரு தாலாட்டுப் பாடினால்...!*

*✏ மூச்சடக்கி ஈன்றாய் என்னை* 
*என் மூச்சுள்ள வரை காப்பேன் 'அம்மா' உன்னை*.

*✒ அன்பைப் பற்றி படிக்கும் போதெல்லாம் தவறாமல் வந்து போகிறது 'அம்மா' வின் முகம்.*

*✏ உலகில் தேடித் தேடி அலைந்தாலும், மீண்டும் அமர முடியாத ஒரே சிம்மாசனம், 'அம்மா' வின் கருவறை*.

*✒ வாழ்க்கையில் தியாகம் செய்பவர் அப்பா. வாழ்க்கையையே தியாகம் செய்பவர் 'அம்மா'!*

*✏ 'அம்மா...!*' *அன்று நம்* *தொப்புள்கொடியை* *அறுத்தது, நம் உறவைப் பிரிக்க அல்ல. அது நம் பாசத்தின்* *தொடக்கத்துக்கு வெட்டப்பட்ட திறப்பு* *விழா ரிப்பன்!* அம்மா என்றால் சும்மா இல்லை; 


 /கருப்புபணமும் வெளிநாட்டு பத்திரிக்கைகளும்// 


*பிரபல போபஸ் பத்திரிக்கை
இந்தியா ஒரு நல்ல தீர்வை நோக்கி செல்லதாக கூறியுள்ளது 

*நியூயார்க் டைம்ஸ் 
மோடியின் இந்த நடவடிக்கையை புத்திசாலிதனமான முடிவு என்று கூறியுள்ளது 

*வாஷிங்டன் போஸ்ட் 
 மோடி கருப்புபண ஒழிப்பு நடவடிக்கையை துவங்கிவிட்டதாக கூறியுள்ளது 

*சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை 
"இதை விட துணிச்சலான முடிவை எந்த பிரதமரும் எடுக்க முடியாது" என்று கூறியுள்ளது 

சிங்கப்பூர் பத்திரிக்கை
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ போல மோடி இந்தியாவில் பிறந்திருப்பதாக கூறியுள்ளது 

//கருப்புபணமும் இந்தியாவில் பத்திரிக்கைகளும்// 

*சொல்லிட்டு செஞ்சா-> கண் துடைப்பு நடவடிக்கை *சொல்லாம செஞ்சா-> அதிகார திமிர் *அவகாசம் கொடுத்தால்-> கார்ப்பரேட் தப்பிக்க உதவி 
*அவகாசம் கொடுக்காவிட்டால்-> பொதுஜனம் பாதிப்பு *செய்யாமலிருந்தால்-> தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? *வெளிநாட்டில் செய்தால்-> அந்த நாட்டு பிரதமர் 
*திட்டத்தை எதிர்த்தால்-> மதச்சார்பின்மைவாதி *திட்டத்தை  ஆதரித்தால்-> மதவாதி

உலகமே மனதார பராட்டுகிறது,திருடர்கள் மட்டுமே வாய்க்கு வந்தபடி பேசுவார்கள் .; 



 தமிழனின் பாரம்பரிய அறிவு - அதிர்ச்சி வேண்டாம்!


தமிழரின் கட்டடக் கலை குறித்து ஒரு ஆவணப்படம் எடுப்பதற்காக கடந்த வருடம் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஊர்களில் நண்பனோடு சுற்றிவந்தேன். பெரிய கோவில்கள், அரண்மணைகள் எல்லாம் அரசனின் செல்வாக்கைக் காட்டுவதாகவும் பிரம்மாண்டத்தை காட்டுவதாகவும் இருந்தன. அவை பற்றிய தகவல்களும் ஆய்வுகளும் நிறைய உள்ளன. ஆனால் நாம் கவனிக்க மறுக்கும் எளிய மக்களின் கலையை, அவர்களது அறிவை ஆவணப்படுத்த வேண்டும் என்பதே எங்களது குறிக்கோளாக இருந்தது. மக்கள் தங்களது குடியிருப்புகளைக் கட்டுவதற்கு பயன்படுத்திய இயற்கைசார்ந்த அறிவும் நுட்பமும் வியக்கும்படியாக இருந்தன.

வீடுகளின் அமைப்பு, வீடு கட்ட பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள்கள் எல்லாம் கவனிக்கப்பட வேண்டியவை. ஒவ்வொரு தொழில் செய்பவர்களுக்கும் ஏதுவாக வீட்டின் தோற்றம் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. 

உதாரணமாக, 
நெசவுத்தொழில் செய்பவர்களது வீடுகளில் சன்னல்கள் தரைப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்தது. ஏனெனில், தரையில் அமர்ந்து கீழே உள்ள குழிக்குள் காலைவிட்டு நெசவு செய்யும்போது வெளிச்சம் குழி வரை படரவே இந்த ஏற்பாடு. 

அதேபோல், நகைத் தொழில் செய்பவர்கள் வீடுகளும் இந்த முறையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. காரணங்களைப் பொருத்தும் பயன்பாடுகளைப் பொருத்தும்தான் நமது கட்டடக் கலை இருந்திருக்கிறது. வீடு கட்டத் தேவையான மணலோ அல்லது கற்களோ அந்தந்த இடத்தில் எது அதிகமாக கிடைக்குமோ அதைவைத்தே கட்டியுள்ளனர். அதுவே சூழலுக்கு ஏற்றதாகவும் இருந்திருக்கிறது.

மேலும் அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலான பழைய காலத்து வீடுகள் தெற்கு நோக்கிய வாசலைக்கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் முக்கியமானது.

 அதாவது, அந்தப் பகுதியில் 8 மாதங்கள் தெற்கிலிருந்து வீசும் தென்றல் எனப்படும் தென்மேற்குப் பருவக்காற்றுதான் வீசுகிறது. தெற்கு நோக்கி வாசல் இருப்பதால் காற்று வீட்டினுள் எளிதாக நுழைந்து சூழலை ரம்மியமாக்குகிறது. அதேபோல், வீட்டின் சமையலறை வாஸ்து சாஸ்திரப்படி தென்கிழக்கில் இல்லை. மாறாக, வடகிழக்கில் இருக்கிறது. அதற்கும் அறிவியல்மூலமாகத்தான் பதிலளிக்கின்றனர். வாடைக்காற்று எனப்படும் வடகிழக்கிலிருந்து வீசும் காற்று குளிர்காலங்களில் நோய்களைக் கொண்டு வருகின்றன. அந்தக் காற்று சமையலறையிலுள்ள புகைபோக்கியின்மூலம் வீட்டினுள் நுழைந்து சமையலறையின் வெப்பத்தை வீட்டின் மற்ற அறைகளுக்குள் கொண்டுவந்து குளிரைப் போக்கி கதகதப்பைத் தருகின்றன என்று அவர்கள் சொன்னபோது, தமிழரின் பாரம்பரிய அறிவை நினைத்து சிலிர்த்துப்போனேன்.

நமது முன்னோர்கள் ஒரு ஊரை அமைக்கும் முறை, இயற்கைசார்ந்த அவர்களின் அறிவை அடிப்படையாகக் கொண்டு இருந்திருக்கிறது.

 ஒரு பெரிய நிலப்பரப்பில் தங்களது இருப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு ஏற்ற இடத்தைத் தேர்வுசெய்ய மாடுகளைத்தான் உபயோகித்தனர். மாடுகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடுவார்கள். மேய்ந்து முடித்து மாடுகள் எந்த இடத்தில் அமர்ந்து இளைப்பாறுகிறதோ அதுவே, மக்கள் தங்கள் இருப்பிடம் அமைய ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். குளிர்ச்சி, காற்றோட்டம் ஆகியவற்றை கணித்து மாடுகள் தேர்ந்தெடுக்கும் அந்த இடம், மனிதர்கள் வாழ ஏற்புடையதாக இருந்தது.

 அந்த அறிவியலை விட்டுவிட்டு இன்று, இதை ஒரு சடங்காகத்தான் நாம் பயன்படுத்துகிறோம். புதிய வீடுகட்டி குடியேறுபவர்கள் கிரஹப்பிரவேசத்தின்போது பசு மாட்டோடு கன்றை வீட்டினுள் கூட்டிவருவது இதன் எச்சமே.

அதுபோல், ஒரு விவசாய நிலத்தை வாங்குவதற்குமுன் அந்த நிலம் வளமானதா என்று பார்ப்பதற்கு சேவல்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். விற்பனைக்கு வரும் நிலத்தை வாங்குவதற்கு முதல்நாளே விவசாயி ஒரு சேவலோடு போய் அங்கு தங்கிவிடுவார். காலையில் எழுந்ததும் அவர் சேவல் கத்தும் ஒலியை வைத்து அந்த நிலத்தை மதிப்பிடுவார். சேவல் நல்ல ஒலி எழுப்பி சத்தமாகக் கூவினால் அது வளமான நிலமாகக் கருதப்படும். அதாவது, முதல் நாளிலிருந்து அந்தச் சேவல் அங்குள்ள புழுக்களைத்தான் தின்றிருக்கும். நிறைய புழுக்கள் இருந்தால் சேவல் நன்றாகச் சாப்பிட்டு சத்தமாக ஒலி எழுப்பும். புழுக்கள் நிறைந்த நிலம் வளமானதாக இருக்கும் என்று நிலத்தை வாங்கியிருக்கின்றனர்.

அம்பாசமுத்திரம், வீரவநல்லூர் ஆகிய அந்தப் பகுதியிலுள்ள ஊர்கள் எல்லாம் பசுமையாகக் காட்சியளித்தன. காய்ந்துகிடக்கும் கரிசல் பூமியிலிருந்துபோன எனக்கு அது பார்ப்பதற்கு இதமாக இருந்தது. அதற்குக் காரணம், ஊரின் நடுவே பாயும் கால்வாய்தான். மக்கள் வீட்டின் பின்வாசல் வழியாக வந்து கால்வாயில் குளித்துச் செல்கின்றனர். அந்தக் கால்வாய்பற்றி அவர்களிடம் கேட்க, ஒரு குட்டிக்கதையுடன் அதைக் கூறினர்.

அந்தப் பகுதியை முன்னர் ஆட்சி செய்துவந்த சிங்கம்பட்டி ஜமீனுக்கும் பக்கத்து ஜமீன் மன்னனுக்கும் போர் மூண்டது. சிங்கம்பட்டி ஜமீன் வலிமை குறைந்த படையைத்தான் கொண்டிருந்தது. போரில் தோற்கும்பட்சத்தில் இங்கிருக்கும் கன்னிப் பெண்களை எதிரிகள் கவர்ந்து செல்வர். 

இதனால் கலக்கமடைந்த ஜமீன், ஊரிலுள்ள பெண்களை எல்லாம் பாபநாசம் அணைக்கு போகச்சொன்னார். அங்கிருந்து போர் நடைபெறும் இடம்வரை ஒரு மைல் தொலைவுக்கு ஒவ்வொரு மணியாக வழியெங்கும் பெரிய மணிகளை கட்டச் சொல்லியிருந்தார். போரில் தமது படை தோற்றுப்போனால் போர்க்களத்துக்கு அருகிலுள்ள மணி அடிக்கப்படும். அதன் சத்தத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு மணியாக அடிக்கப்பட, அணையின் மீதுள்ள பெண்கள் இந்தத் தகவலையறிந்து தண்ணீருக்குள் குதித்து தங்கள் உயிரைப்போக்கிக்கொள்ள வேண்டும். எதிரியின் கையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க இந்த விபரீத முடிவு எடுக்கப்பட்டிருந்தது. 

ஆனால் நினைத்ததுக்கு மாறாக போரில் சிங்கம்பட்டி ஜமீன் வென்றது. ஆனால் குரங்கு ஒன்று பழத்தை தின்றுவிட்டு கொட்டையை ஒரு மணியில் எறிந்துள்ளது. மணி அடிக்கப்பட்டதாக ஒவ்வொரு மணியாக அடிக்கப்பட அணையின்மீது நின்றிருந்த பெண்கள் மணியின் ஓசையைக் கேட்டு நீருக்குள் குதித்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். 

மக்கள் எல்லோரும் சேர்ந்து அழுதபடி ஜமீனிடம் முறையிட ஜமீன் கலங்கிப்போனார். தன் மக்களுக்கு ஏதாவது பிராயசித்தம் செய்ய நினைத்து, பாபநாசம் தண்ணீரை கால்வாய் அமைத்து அந்தப் பகுதிகளிலுள்ள ஊருக்கெல்லாம் கொண்டுவர எண்ணி வேலையைத் தொடங்கினார். அதன்படி, மலையிலிருந்து மாடுகளை கூட்டமாக மேய்ச்சலுக்குவிட்டார்கள். மாடுகள் எந்தப் பகுதிகள் வழியாக இறங்கி எந்தப் பக்கமெல்லாம் செல்கிறதோ அந்தப் பாதையில் கால்வாயை அமைத்தனர்.

 மனிதனால் அமைக்கப்பட்ட கால்வாயாக இருந்தாலும் தண்ணீரின் போக்கு சீராக வந்து, இன்றும் பயன்பாட்டில் இருந்து மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்கிறது. ஆனால் அதன் அருகிலுள்ள இன்னுமொரு பகுதியில் பலகோடி ரூபாய் செலவில் நமது அரசு போட்டிருக்கும் புதிய கால்வாய் திட்டம் ஒன்று தோல்வியைச் சந்தித்து நிற்கிறது அதையும் பார்த்தோம்.

திருநெல்வேலியிலுள்ள மாவட்ட ஆட்சியரின் இல்லம் பாளைமேட்டுத் திடலில் இருப்பதற்கான காரணம், நகரின் மேட்டுப்பகுதியான அங்கு மேற்குத் தொடர்ச்சிமலையிலிருந்து வரும் மூலிகைக் காற்று வீசுகிறது. இது, உடலில் படுவதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இது, அரசுக் குறிப்பேட்டில் உள்ள தகவல். இதைத் தெரிந்த காமராசர், தனது ஆட்சிக்காலத்தில் பொது மருத்துவமனையை அங்கு அமைக்கச் சொன்னார்.

‘இயற்கையோடு இயைந்த வாழ்வு’ என்று, நமது முன்னோர்கள் எதுகைமோனைக்காக சொல்லவில்லை. அதுவே அவர்களது வாழ்க்கைமுறையாக இருந்தது. நாம் நமது அவசர வேகத்தில் நாகரீகம் என்ற பெயரில் பாரம்பரிய அறிவையும் உதறி நிற்கிறோம்.

 ஊர்களை நீர்நிலைகளைச் சுற்றி அமைத்த காலம் போய், ரியல் எஸ்டேட்காரர்களின் வழிகாட்டுதலில் ஏரி, குளங்கள்மேல் பிளாட் போட்டு வீட்டைக் கட்டுகிறோம். பெருமழையின்போது உணவுப் பொட்டலங்கள் கேட்டு மொட்டைமாடி மீது நின்று பிச்சை எடுக்கிறோம்.

இனி, இதுபோல் ஒரு அவலம் நேராமல் இருக்க பாரம்பரிய அறிவைத் தேடியெடுத்து ஆவணப்படுத்துவதும் முடிந்தவரை அதைப் பின்பற்றுவதுமே நமது எதிர்கால வாழ்வுக்கான வழியாக இருக்க முடியும்.
வாழ்க தமிழகம்...; 


 "நேர்மறை எண்ணங்கள் நிலையான வெற்றிக்கு அடித்தளம்"


 நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது வாழ்வில் மகிழ்வினை உண்டாக்கும்...

 எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வதால் வாழ்வே சுவையற்றதாகி பயனற்றதாகிவிடும்...

 எண்ணமே வாழ்வு. யார் எதை நாடி செல்கின்றார்களோ அதுதான் அவர்களுக்கு கிடைக்கும்....

        "எதிர்மறை எண்ணத்திலேயே ...
"நேர்மறை எண்ணம் மறைந்திருக்கிறது.... 

             எப்படி?...

ஓர் குடத்தில தண்ணீர் 3/4 பங்கு தான்...
இருக்குன்னு "feel" பண்ணுவதைவிட ....
1/4 பங்கு தான் இல்லேன்னு நினைச்சு 
"fill" பண்ணு ....

இதன் மூலம் குடமும் முழுமை அடையும்,
நம் மனமும் மகிழ்ச்சி அடையும்....

உங்கள் குழந்தைகளுக்கு நேர்மறை  எண்ணங்களை 
சொல்லித் தாருங்கள்  .....; 


: *யார், யார் எப்படி பேசுவார்கள்..?* 


*கிரிக்கெட் வீரர்*
"ஓவரா" பேசுவார் 

*போட்டோகிராபர்*
"டெவலப் பண்ணி" பேசுவார் 

*ரவுடி*
"அடிச்சுப்" பேசுவார் 

*ஹோட்டல் சர்வர்*
"சூப்"பரா பேசுவார் 

*வக்கீல்*
"பீஸ்புல்லா" பேசுவார் 

*ஃபாஸ்ட் ஃபுட் ஓனர்*
"காரசாரமா" பேசுவார் 

*ஐஸ் விக்கிறவர்*
"குளிரக் குளிரப்" பேசுவார் 

*டெய்லர்*
"கட் பண்ணிப்" பேசுவார் 

*பூக்கடைக்காரர்*
வார்த்தையை "அளந்து" பேசுவார் 

*டயட்டீஷியன்*
"உப்பு சப்பில்லாமல்" பேசுவார் 

*பேங்க் மேனேஜர்*
"இண்ட்ரஸ்டா" பேசுவார் 

*பியூட்டீஷியன்*
"அழகாப்" பேசுவார் 

*எலக்ட்ரீசியன்*
"ஷாக்" அடிச்சமாதிரி பேசுவார். 

*கசாப்புக் கடைக்காரர்*
"வெட்டு ஒண்ணு, துண்டு ரெண்டுன்னு" பேசுவார் 

*ஸ்வீட் கடைக்காரர்*
"இனிக்க இனிக்கப்" பேசுவார் 

*மீன் வியாபாரி*
"நாறடித்து" பேசுவார் 

*கண்டக்டர்*
"நடந்து நடந்து" பேசுவார். 

*டிரைவர்*
"நிறுத்தி நிறுத்தி" பேசுவார். 

*பால் வியாபாரி*
பழம் நழுவி "பாலில்" விழுவது போல் பேசுவார். 

*பெர்ஃயூம் கடைக்காரர்*
"மணக்க மணக்க" பேசுவார். 

*டீ மாஸ்டர்*
"சூடா"க பேசுவார். 

*கணக்கு வாத்தியார*
"கூட்டி குறைத்து" பேசுவார். 

மேலே சொன்ன அத்தனையும் ஒருத்தன் பேசுவான்...

அவன்தான் "அரசியல்வாதி"...; 

 *கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள்  நம் தமிழ் மொழியில் .....*

Analog – உவமம்
Digital – துடிமம்
Computer – கணிபொறி
CPU – மையச் செயலகம்
Memory – நினைவகம்
Keyboard – விசைப்பலகை
Monitor – திரையகம்
Mouse – சுட்டி, சொடுக்கி
Floppy Disk – நெகிழ்வட்டு
Hard Disk – நிலைவட்டு
Compact Disk – குறுவட்டு
Disk Drive – வட்டகம்
Printer – அச்சுப்பொறி
Inkjet Printer – மைஅச்சுப் பொறி
Dot Matrix Printer – புள்ளி அச்சுப்பொறி Laser Printer -ஒளியச்சுப் பொறி
Ploter – வரைவு பொறி
Scanner – வருடு பொறி
Modem – இணைக்கி
Input – உள்ளீடு
Output – வெளியீடு
Network – பிணையம்
Internet – இணையம்
WWW – வைய விரிவலை
Website – வலையகம்
Portal – வலைவாசல்
Webpage – வலைப்பக்கம்
Webcasting – வலைபரப்பு
Netizen – வலைவாசி
Browser – உலாவி
Server – புரவன்
Client – கிளையன்
Terminal – முனையம்
Workstation – பணி நிலையம்
Node – கணு
Search Engine – தேடு பொறி
E-mail – மின் அஞ்சல்
E-Commerce – மின் வணிகம்
Download – பதிவிறக்கம்
Upload – பதிவேற்றம்
Encryption – மறையாக்கம்
Decryption – மறைவிலக்கம்
Hackers – ஊடுருவிகள்
E-Cash – மின்பணம்
IT – தகவல் தொழில்நுட்பம்
Text – உரை
Graphics – வரைகலை
Sound – ஒலி
Audio – கேட்பொலி
Video – நிகழ்படம்
Photo – நிழற்படம் / ஒளிப்படம் Microprocessor – நுண்செயலி
ROM – அழியா நினைவகம்
RAM – நிலையா நினைவகம்
Mother Board – தாய்ப்பலகை
Expansion Slot – விரிவாக்கச் செருகுவாய் Animation – நகர்படம்
Motion capture – அசைவுப்பதிவு
Wire freame – வலைப்புள்ளிச்சித்திர­ம் Rendering – உருப்பெருதல்
Texture – புறத்தோற்றம்
Multimedia – பல்லூடகம்
Data – விவரம் / தகவல்
Column – நெடுவரிசை
Row – கிடைவரிசை
Table – அட்டவணை
Data Base – தகவல் தளம்
Word Processor – சொல் செயலி
Spread Sheet – விரிதாள்
Operating System – இயக்க முறைமை
Platform – பணித்தளம்
GUI – வரைகலைப் பணிச்சூழல்
User – பயனாளர் / பயனாளி /பயனர் Password – நுழைசொல்
Application Package – பயன்பாட்டுப் பணித்தொகுப்பு File – கோப்பு
Document – ஆவணம்
Directory – கோப்பகம்
Folder – கோப்புறை
Variable – மாறி
Constant – மாறிலி
Instruction – ஆணை
Command – கட்டளை
Program – செயல்வரைவு
Function – செயல்கூறு
Interpreter – ஆணைமாற்றி
Compiler – மொழிமாற்றி
Translator – மொழிபெயர்ப்பி
Binary Language – இரும மொழி
Window – சாளரம்
Menu – பட்டியல்
Icon – சின்னம் / குறும்படம்
Font – எழுத்துரு
Erase – அழி
Delete – நீக்கு
Remove – அகற்று
Format – வடிவமை / அழகமை
Virtual – மெய்நிகர்
Virtual Reality – மெய்நிகர் நடப்பு
Artificial Intelligence – செயற்கை நுண்ணறிவு
Remote Control – தூர இயக்கி
CD Player – இறுவட்டு இயக்கி; 


 படித்ததில் பிடித்தது....


நகரத்து வீதியில் ஒரு கார் சென்றுகொண்டு இருக்கிறது....

உள்ளே ஒரு கணவன் மனைவி, ஐந்து வயது மகன், வயதான அப்பா! நான்குபேரும் பயணிக்கிறார்கள்.

கணவன் காரை ஓட்ட, மனைவி அருகில் உட்கார்ந்து இருக்க, குழந்தை பின் சீட்டில் தாத்தாவோடு விளையாடிக் கொண்டு இருக்கிறான்!

கார் ஒரு மெடிக்கல் ஷாப்பில் நிற்க அவன் இறங்கி தந்தையிடம் இருந்த மருந்துசீட்டை வாங்க,

தந்தை: சும்மா ஒரு நாலு நாளைக்கு வாங்கிக்கப்பா போதும், டாக்டருங்க அப்படிதான் எழுதி கொடுப்பாங்க....

மகன்: நீங்க சும்மாருங்கப்பா. டாக்டர் சொன்ன மாதிரி ஒரு மாசத்துக்கு வாங்கிக்கலாம் எல்லா மருந்தும். சரியா ஒரு மாசம் சாப்டிங்கன்னா எல்லாம் சரியாயிடும்.... என்றபடி மருந்துசீட்டை வாங்கிச்சென்று எல்லா மருந்துகளையும் வாங்கி வந்தார்!

குழந்தை தன் அப்பாவின் பாசத்தை கவனித்துக் கொண்டு இருந்தான்!

அடுத்ததாக கார் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நின்றது.

மகன், ''என்னென்ன பழங்கள் புடிக்கும் அப்பா?'' என்று தந்தையிடம் கேட்க,

''எதாவது கால்கிலோ வாங்கிட்டு வாப்பா... போதும்! எதுக்கு தேவையில்லாத செலவு'' என்று தந்தை சொல்ல,

மருமகள், ''இதையெல்லாமா அவர்கிட்ட கேட்டுட்டு இருப்பீங்க, எல்லாத்துலயும் அரை அரை கிலோ வாங்கிட்டு வாங்க'' என்றதும் குழந்தை தன் அம்மாவையும் சந்தோஷமாக பார்த்தான்!

இரண்டு கைகளிலும் நிறைய பழங்கள் ஹார்லிக்ஸ் என தாத்தாவுக்காக இவ்வளவு பொருட்களை சந்தோஷமாக வாங்கிவரும் அப்பாவை பெருமையோடு பார்த்துக்கொண்டிருந்தான்!

கார் கிளம்பியது. சிறிது நேர பயணத்துக்கு பின், கார் ஒரு கட்டிடத்தின் வாசலில் நின்றது.

அது ஒரு 'முதியோர் இல்லம்!'

வாங்கி வந்த பொருட்களை எல்லாம் கணவன் மனைவி இருவரும் கஷ்டப்பட்டு சுமந்து சென்று உள்ளே வைத்தார்கள்.

''மருந்து எல்லாம் தவறாம சாப்பிடுங்கப்பா...  எதாவது அவசரம்னா போன் பண்ணுங்க'' என்றபடி இந்த மாதத்திற்கான பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு திரும்பிச்செல்ல....

முதல் நாள் பள்ளியில் விட்டுச்சென்ற குழந்தையைப்போல் அந்த முதியவர் தன் மகனையை பார்த்து நிற்க, பேரன் மட்டும் ஏதும் புரியாமல் டாடா காட்டியபடி சென்றான்!

கார் சென்றுகொண்டு இருந்தது. குழந்தை முன் சீட்டில் உட்கார்ந்திருக்க மனைவி பின் சீட்டில் அமர்ந்து இருந்தாள்!

ஏக்கத்துடன் குழந்தை, ''ஏன்பா தாத்தாவ நம்ப வீட்ல வச்சிக்காம இங்க விட்டுட்டு வர்றோம்?!''

தந்தை, ''தாத்தாவுக்கு வயசாயிடுச்சி இல்லையா, அதான் இங்க விட்டுட்டு வர்றோம்! இங்க இருந்தாதான் சந்தோஷமா இருப்பாரு...''

''அப்போ உங்களுக்கும் வயசாயிடுச்சின்னா நான் இங்கதான் கொண்டுவந்து விடனுமா....?!''
என்ற குழந்தையின் கேள்வியில், அதிர்ந்துபோய் பிரேக்கை அழுத்த....  காதை கிழிக்கவேண்டிய சத்தம் ஏனோ அவர்களுக்கு நெஞ்சை கிழித்தது...

நீதி : முற்பகல் செய்த வினை பிற்பகல்  தானே வரும்.; 


 இந்தியாவில் மத்திய அரசின் கருப்புபணம் ஒழிப்பு !!! 7நாட்களிள் முடிவுடைய வேண்டிய திட்டம் நாட்கள் நீடித்த காரணம் என்ன?   

⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓
               இந்தியாவில் கோடீஸ்வரன் மீண்டும் மறு பிறவி எடுத்தான் கோடீஸ்வரனாக! ஏழை மீண்டும்  ஏழையாகவே புதைக்கபட்டான் இந்தியா வல்லரசு நாடாகா மாறுமா?
⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓⚓
 இந்தியாவில் மத்தியஅரசு கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும்.தீவிரவாதிகள் கைவசம் ரூ500,ரூ1000நோட்டுகள் அதிகமாக உள்ளது.பாகிஸ்தானில் அசிஅடிக்கபட்ட ரூ.500,ரூ1000ரூபாய் நோட்டுகள் அதிகஅளவில் இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.இதனை அணைத்தையும் தடுக்க ஓரே வழி ரூ500,ரூ1000நோட்டுக்களை தடை செய்ய வேண்டும்.இதனால் கருப்புபணம் கள்ள நோட்டுகள் அடியோடு அழிந்து விடும் இதானால் இந்தியாவில் ஏழை மக்களின் பொருளாதார வளர்ச்சி இருக்கும்.இதனால் இந்தியா வல்லரசு நாடாகா மாறும் என்ற நல்ல நோக்கத்தில் மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது.ஆனால் 7நாட்களில் முடிய வேண்டிய திட்டத்தை மத்திய அரசு நீண்ட நாட்களில் ஒரு தேதியை அறிவித்ததால் கருப்புபணம் உரிமையாளர்கள் அவர் அவர்களுடைய செல்லாதரூ500,ரூ1000ரூபாய் கருப்பணத்தை சிலருக்கு கமிஷன்(%)கொடுத்து வெவ்வேறு வழிகளில் பொருளாகவும் நடைமுறையில் இருக்கின்ற ரூபாய் நோட்டுக்களாகவும் மாற்றி மீண்டும் மறு பிறவி எடுத்துள்ளனர்.கோடீஸ்வரனாக ஆனால் ஏழை மக்கள் தன் தின கூலி வேலைகளை விட்டு விட்டு வங்கியின் வாசலியே புதைக்கப்பட்டு உள்ளனர்.ஏன்னென்றால் பெறும்பாலான வங்கிகலில் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரூபாய் நோட்டு மாற்ற முடியாது என்று சொல்லி விடுகின்றனர்.மாலை 5.30 மணிக்குமேல் அந்த வங்கியின் சக ஊழியர்களின் உதவிகளோடு கமிஷன்(%)அடிப்படையில்  கருப்புபணம் மாற்றபடுகின்றது.இதற்கு  சாட்சி சமந்தப்பட்ட வங்கியில் பொருத்தப்பட்ட கேமராவே!  திட்டங்களை சரியாக சிந்திக்காமல் மத்திய அரசு அறிவித்த இந்த திட்டங்கள் படும் தோல்வி அப்பரம் எப்படி இந்தியா வல்லரசு நாடாகா மாறும்.   


                                    7நாட்களில் முடிய வேண்டிய திட்டம்                    மத்தியரசு இந்தியாவில் கருப்புபணம் ஒழிக்கும் திட்டங்கள் கொண்டு வருவதற்கு முன்பே புதிய ரூ500,2000 நோட்டுக்கள் எவ்வளவு தேவை என்பதை தெரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தவாறு ரூபாய் நோட்டுக்களை ரகசியமாக அச்சி அடித்துவைத்து கொண்டுயிருக்க வேண்டும்.பின்பு இதற்க்காக பலவிதமான தனிப்படைகள் அமைத்திற்க்க வேண்டும்.அதன்பின். வங்கிகளுக்கு முதல் 2நாட்கள் விடுமுறை விட்டு வங்கியில் உள்ள அனைத்து ரூபாய் நோட்டுகளையும் அரசு கைப்பற்றியிருக்க வேண்டும்.அப்படி கைப்பற்றூம் போது அரசு எந்த எந்த ரூபோய் நோட்டில் எவ்வளவு இருக்கின்றது.அதன் முழு புள்ளி விபரங்களையும் ஒரு டாக்மன்டாக அந்த வங்கிகளுக்கு அரசு தந்திற்க்க வேண்டும்.அதேப்போல் தேர்தல் போலவே அந்தந்த கிராமத்திலும் மற்றும் பேருராட்சி,நகராட்சியி,மாநகராட்சியில் வார்டுகளில் 5வார்டுகளுக் ஒரு பூத் என்ற அடிப்படையில் வங்கி பூத் கவுண்டர் திரக்கப்பட்டு இருக்க வேண்டும்.அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைப்பார்க்கின்ற கம்ப்யூட்டர் தெரிந்த கேஷியர்களை அழைத்து அந்த அந்த வங்கி பூத்கவுண்டரில் ஒரே நாட்கள் பயிற்ச்சி தர வேண்டும்.பதிவு செய்வதற்க்கான கணினி வசதிகள் ஆதார்அட்டை பதிவு செய்வதற்க்கான அனைத்து வசதிகள் லாக்கர் வசதியும் செய்திருக்க வேண்டும். பஸ்,இரயில்,விமானம்.மருத்துவமனை,மின் நிலையம்,தீயணைப்பு,காவல்துறை ,போஸ்ட்ஆபிஸ், BSNL,கூறியர்சர்வீஸ் துறைகளை தவிர மற்ற அரசு மற்றும்தனியார் துறைகளுக்கு விடுமுறை அளித்திற்க்க வெண்டும்.அதுமட்டும் இல்லாமல் பால்,அரிசி,மள்ளிகைபொருட்கள்,சூப்பர்மார்கட்,காய்கறி,கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளுக்கும் 5நாட்கள் விடுமுறை அளித்திற்க்க வேண்டும்.அன்றைக்கே ரூ500,ரூ1000நோட்டுக்கள் செல்லாது பணம் மாற்ற வேண்டும் என்றால் பொது மக்கள் வசதிக்காக உங்கள் பகுதியில் வங்கி பூத் கவுண்டரில்ரூ6யிரம் வரை மாற்றிக்கொள்ளலாம் டெப்பாசெட் வங்கியில் செய்துக் கொள்ளலாம் கண்டிப்பாக ஆதர்அட்டைகொண்டு வரவேண்டும்.ஆதார் அட்டை இல்லாதவர்கள் தகுந்த ஆணங்களுடன் e-சேவையில் பதிவு செய்து உடனே பெற்றுக்கொள்ளளாம் என்று அறிவிப்பு கொடுத்து யிருக்கலாம். எல்லா வங்கி பூத் கவுண்டருக்கும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அந்த அந்த பூத் லாக்கருக்கு கொண்டு சென்றுயிறுக்க வேண்டும்.எல்லா வங்கி பூத் கவுண்டரில்லும் உள்ளே வெளியே கண்காணிப்பு கேமரா அதேபோல் எல்லா இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இந்த வேலைகளை அனைத்தையும்   2நாட்களில் இரவும் பகலும் பார்க்காமல் செய்து முடித்து விட்டு.3வதுநாட்கள் முதல் 7வரை பணம் மாற்ற வருபவர்ளின் ஆதார் அட்டையை வங்கி பூத் கவுண்டர் வெளியே ஆண்லைன் மூலம் டச் பதிவு செய்ய வேண்டும்.அப்போது அவர்களின் புகைப்படத்திற்க்கு கீழ் பச்சை நிறம் டிக் மார்க் வரும்படியும் 2வது முறை பணம் எடுக்க வரும் போது சிகப்பு நிறத்தில் டிக் மார்க் வரும்படி செட் பன்ன வேண்டும்.இந்த நெட் இணைப்பு இந்தியா முழுவதும் எங்கு சென்று பணம் எடுக்க முயற்ச்சி செய்தாலும் காட்ட வேண்டும்.இப்படி செய்து இருந்தால் கைவிரலுக்கு மை தேவையில்லை மிகவும் சுலபமாக 2வது முறை பணம் எடுக்க வருபவர்களை அடையாளம் கண்டு கொண்டு இருக்கலாம்.பின்பு மத்தியரசு அறிவிப்பின் படியே ஒவ்வோருவரும் அவர்களின் சரியான வருமானத்திற்க்கு தகுந்தவாறு வங்கியில் பணம் டெபாசிட் செய்துயிருக்கலாம்.விடுமுறை அளிக்கப்படாத துறைகளில் வேலை செய்பவர்களுக்கு உடனே நேரடியாக சென்று பணம் மாற்ற டெபாசிட் செய்யு வசதிகள் இது போன்ற வசதிகளை பொதுமக்களு ஏற்பாடுகளை செய்து இருந்தால் கருப்பு பணத்தை எந்த வழிகளிலும் மாற்றியிருக்க முடியாது.7நாட்கள் குல்லே பணம் மாற்றம் டெபாசிட் எல்லாம் முடிந்திற்க்கும்.அதன் பின் அனைத்து வங்கிகளுக்கும் நடைமுறையில் உள்ள பணத்தை அவர்களின் டாக்மன்ட்டில் உள்ளவாறு டெலிவரி செய்து இருக்கலாம்.ஏடி எம்.பணவசதிகளும் தடையில்லாமல் இருந்திற்க்கும்.பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும்  பாதிக்கப்பட்டுயிருக்காது. ஏன் இதுப்போன்று மத்தியரசு செயவில்லை.  





 🍊🍐🍎🍋🍌🍅🍑🍒🍈☕🍵🍼🍨🍧🍦

*_சர்க்கரை நோய்க்கான எளிய; முற்றிலும் இலவசமான,  இயற்கை மருந்து!!_


_```சர்க்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம்?```_

_```உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான், கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து!!```_

_```உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன் ,  அதிக அளவு  எடுத்துக் கொண்டனர்!!```_

_```வாழ்வதற்காக  உண்டனர்!  உண்பதற்காக வாழ்ந்தனர்!```_

_```அதனால்தான் பொறுமையுடனும், அமைதியுடனும், பொறுப்புடனும் உணவு சாப்பிட்டனர்!!```_

_```அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது. கூடுதல் உமிழ்நீரை சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர். நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்!!```_

   _```உமிழ்நீரை அதிக அளவு எடுத்துக் கொண்டதால், கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதற்கு எந்தத் தடையும் ஏற்படவில்லை!!```_

_```"தூண்டல், துலங்கல்" என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது!```_

_```நம் முன்னோர்கள் நாட்களைக் கணக்கிட்டு, மாதங்களைக் கணக்கிட்டு வேலை பார்த்தனர்!!```_

_```தற்காலத்தில் நாம் மணியைக் கணக்கிட்டு, நிமிடத்தைக் கணக்கிட்டு, நொடியைக் கணக்கிட்டு வேலை பார்க்கிறோம்!!```_

_```அந்த அளவிற்கு நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.  உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது!```_

_```வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி, சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்!```_

_```உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல், அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்!!```_

_```நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது!```_

 _```உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சர்க்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்!```_

_```நாளடைவில் அது சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது!!```_

_```சர்க்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்!!```_
_```எனவே; நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிட பழகிக் கொள்ள வேண்டும்!```_

_```நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட  உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அனுப்ப வேண்டும்!!```_

_```நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்!!```_

எனவே இதை அதிக நபர்களுக்குப் பகிருங்கள்!
👌நொறுங்கத் தின்னா நூறு வயசு..

உமீழ் நீர் உயிர் நீர்.; 


 பேரன்👦: பாட்டி தூக்கம் வரல.. 
 TV பாக்கட்டுமா?

பாட்டி👵: எங்கிட்ட பேசிட்டிருடா பேரான்டி..

பேரன்👦: பாட்டி.. நம்ம வீட்ல எப்போதுமே 6 பேர் தான் இருப்போமா..?
நீங்க👵, 
அம்மா👩, 
அப்பா👨, 
அக்கா👧, 
நான்👦  
என் பூனைக்குட்டி🐈

பாட்டி👵: அப்டி இல்லியே.. 
உனக்காக நாளைக்கி ஒரு  doggy🐕 வருது.. 
அப்போ 7 ஆகிடுவோம்..

பேரன்👦: ஆனா, doggy என் பூனைக்குட்டிய கடிச்சி கொன்னுடுமே...
மறுபடியும் 
6 பேர் ஆகிடுவோம்.

பாட்டி👵: இல்லப்பா..
உனக்கு கல்யாணம் ஆகும்ல.. 
அப்ப7 பேர் ஆகிடுவோம். 

பேரன்👦: அப்படினா அக்காவுக்கும் கல்யாணமாகி போயிடுமே.. 
அப்ப 6 பேர் தான இருப்போம்.

பாட்டி👵: ஓஹ்.. 
செல்ல ராசா...
உனக்கு பிள்ளை பிறக்குமே..
அப்ப  7 பேர் ஆகிடுவோம்ல. 

பேரன்👦: ஆனா, அதுக்குள்ள நீங்க செத்து போயிடுவீங்களே..
மறுபடியும் 6 பேர் தான் இருப்போமா..?

பாட்டி👵: அடி  செருப்பால ..
போய் TV யே பாத்து தொலை da..

😂😂😂 😂😂😂; 



 30-11-2016  


✍✍உலக தொலைக்காட்சி தினம்

✍✍வங்காளதேச இராணுவத்தினர் தினம்

✍✍இந்திய இயற்பியல் அறிஞர் சி.வி.ராமன் இறந்த தினம்-1970

✍✍அலாஸ்கா நெடுஞ்சாலை திறக்கப்பட்டது-1942

✍✍இந்திய விடுதலைக்குப் பின்ஜெய்கிந்த் என்ற வார்த்தையுடனான முதல் அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.-1947

✍✍பாரதத்தின் முதல் ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக் அபாச்சி ஏவப்பட்டது-1963

✍✍வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

✍✍புது ரூ2,000, நோட்டு வெச்சிருக்கீங்களா? உங்ககிட்ட மோடியே பேசும் ஆப் ரிலீஸ்..

✍✍அரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன் அமைச்சர் பாண்டியராஜன்

✍✍இணையதள பயன்பாடு : மகாராஷ்டிரா 'டாப்!!!*

✍✍ கோடி கணக்கில் சேர்த்த பள்ளி ஆசிரியர் கைது!!*

✍✍எந்தவித கட்டணமும் இன்றி, மொபைல் போன் வாயிலாக, பண பரிமாற்றத்துக்கு உதவும் செயலிகள் !!*

✍✍சட்டவிரோதமாக பிறருடைய வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்தால் 7 ஆண்டு சிறை

✍✍ மக்கள் கொந்தளிப்பு எதிரொலி.. ரூ 500, 1000 செல்லாது என்ற உத்தரவை மறு ஆய்வு !!*

✍✍தனி ஊதியம் -750 வழங்குவதி குறித்து நீதிமன்ற ஆணையை நிறைவேற்றும் பொருட்டு நேரில் விசாரணை !!

✍✍CPS காலநீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுனர் குழு !!

✍✍கருப்பு பணத்தை சட்டவிரோதமாக மாற்றுவோருக்கு 7 ஆண்டு சிறை: வருமான வரித்துறை எச்சரிக்கை.

✍✍செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகம்

✍✍மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!

✍✍மக்களுக்கான செயற்கைக்கோளை செலுத்துவதில் இந்தியா முதலிடம்: மயில்சாமி அண்ணாதுரை

✍✍ரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு செய்து உரிய மாற்றங்கள் செய்வேன்: மோடி உறுதி

✍✍சீன ஓபன் சூப்பர் பேட்மிண்டன் .. முதல் முறையாக பட்டம் வென்று அசத்தினார் பி.வி.சிந்து

✍✍இனி வருமான வரி கிடையாது ??? மாேடியின் அடுத்தடுத்த அதிரடி..!!!

✍✍பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்: ‘தி இந்து - யங் வேர்ல்டு’ சார்பில் ஓவியப் போட்டி - முதல் சுற்றுக்கான கடைசி தேதி நவம்பர் 25; 



 பணம் பற்றிய பொன்மொழிகள்




பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.

-ஸ்மித்.


பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்

- ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.

 -வீப்பர்.

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

- பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.

 - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.

 -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.

 - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!

- கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.

- ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

- தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.

- பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.

 - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை

- டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை

- பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை

- ஆஸ்திரேலியாப் பழமொழி.; 




 *உ லகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.*


*தமிழ் எண்கள்* 

1 - க,  2 - உ,  3 - ங,  4 - ச,  5 - ரு,  6 - சு,  7 -  எ,  8 - அ,  9 - கூ,  10 - கo,  
11 - கக,  12 - கஉ,   13 - கங,  14 - கச,   15 - கரு,  16 - கசு,  17 - கஎ,  18 - கஅ,  19 - ககூ,  20 - உo
21 - உக,  22 - உஉ,  23 - உங,  24 - உச,  25 - உரு,  26 - உசு, 27 - உஎ,  28 - உஅ,  29 - உகூ, 30 - ஙo
31 - ஙக,  32 - ஙஉ,  33 - ஙங,  34 - ஙச,  35 - ஙரு,  36 - ஙசு, 37 - ஙஎ,  38 - ஙஅ,  39 - ஙகூ, 40 - சo, 
41 - சக,   42 - சஉ,  43 - சங,   44 - சச,   45 - சரு,  46 - சசு,  47 - சஎ,   48 - சஅ,  49 - சகூ,  50 - ருo
51 - ருக,  52 - ருஉ,  53 - ருங,  54 - ருச,  55 - ருரு,  56 - ருஎ, 57 - ருஎ,  58 - ருஎ,  59 - ருகூ, 60 - சுo
61 - சுக,  62 - சுஉ,   63 - சுங,   64 - சுச,  65 - சுரு,  66 - சுசு,  67 - சுஎ,   68 - சுஅ,  69 - சுகூ, 70 - எo
71 - எக,  72 - எஉ,   73 - எங,   74 - ஏசு,  75 - எரு,  76 - எசு,  77 - எஎ,   78 - எஅ,  79 - எகூ, 80 - அo
81 - அக,  82 - அஉ,  83 - அங,   84 - அச,  85 - அரு, 86 - அசு,  87 - அஎ,  88 - அஅ,  89 - அகூ, 90 - கூo
91 - கூக,  92 - கூஉ,  93- கூங,   94 - கூச,  95 - கூரு,  96 - கூசு, 97 - கூஎ, 98 - கூஅ, 99 - கூகூ, 100 - கoo

101 - கoக, 102- கoஉ, 103 - கoங, 104 - கoச,  105 - கoரு, 106 - கoசு, 107 - கoஎ, 108 - கoஅ, 109 - கoகூ, 110 - ககo
111 - ககக, 112- ககஉ, 113 - ககங, 114 - ககச,  115 - ககரு, 116 - ககசு, 117 - ககஎ, 118 - ககஅ, 119 - கககூ, 120 - கஉo
121 - கஉக, 122- கஉஉ, 123 - கஉங, 124 - கஉச, 125 - கஉரு, 126 -கஉசு, 127 - கஉஎ, 128 - கஉஅ, 129 - கஉகூ, 130 - கஙo
131 - கஙக, 132- கஙஉ, 133 - கஙங, 134 - கஙச, 135 - கஙரு, 136 - கஙசு, 137 - கஙஎ, 138 - கஙஅ, 139 - கஙகூ, 140 - கசo
141 - கசக, 142- கசஉ, 143 - கசங, 144 - கசச,  145 - கசரு,  146 - கசசு,  147 - கசஎ,  148 - கசஅ,  149 - கசகூ, 150 - கருo
151 - கருக, 152- கருஉ, 153 - கருச, 154 - கருச, 155 - கருரு, 156 - கருஎ, 157 - கருஎ, 158 - கருஅ, 159 - கருகூ, 160 - கசுo
161 - கசுக, 162- கசுஉ, 163 - கசுங, 164 - கசுச, 165 - கசுரு, 166 - கசுசு, 167 - கசுஎ,  168 - கசுஅ, 169 - கசுகூ, 170 - கஎo
171 - கஎக, 172- கஎஉ, 173 - கஎங,  174 - கஏசு, 175 - கஎரு, 176 - கஎசு, 177 - கஎஎ,  178 - கஎஅ, 179 - கஎகூ, 180 - கஅo
181 - கஅக, 182- கஅஉ, 183 - கஅங, 184 - கஅச, 185 - கஅரு, 186 - கஅசு, 187 - கஅஎ, 188 - கஅஅ, 189 - கஅகூ, 190 - ககூo
191 - ககூக, 192- ககூஉ, 193 - ககூங, 194 - ககூச, 195 - ககூரு, 196 - ககூசு, 197 - ககூஎ, 198 - ககூஅ, 199 - ககூகூ, 200 - உoo

*மொரீசியசு* நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம் . எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. 

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர். 


 தொண்ணூற்று ஒன்பது மலர்கள் ~

அதிசயித்தேன் இயற்கை அன்னை அளித்த பூவினங்களை எண்ணி .... ஆச்சரியித்தேன் சங்கத்தமிழ் தந்த மலர்களைப் படித்து ... தொண்ணூற்று ஒன்பது வகை பூவாம் .... குறிஞ்சிப்பாட்டில் கூறுகின்றார் ... கவிநாயகர் கபிலர்.
.
ஒரு முறை படிக்கவே மூச்சுமுட்டுதமா ...  மறுமுறை படிக்கவோ..நெஞ்சம் துள்ளுதம்மா ...  நான் சுவைத்த தமிழின் சுவையை.. நீங்களும் சுவைத்திட ... இதோ அணிவிக்கிறேன்.. உங்கள் கழுத்தில் .. கபிலர் தொடுத்த... பூச்சரத்தை ...... அகர வரிசையில் ..... 
1. அடும்பு 2. அதிரல் 3. அவரை - நெடுங்கொடி அவரை 4. அனிச்சம் 5. ஆத்தி - அமர் ஆத்தி 6. ஆம்பல் 7. ஆரம் (சந்தன மர இலை) 8. ஆவிரை - விரிமலர் ஆவிரை 9. இருள்நாறி - நள்ளிருள் நாறி 10. இலவம்
11. ஈங்கை 12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 13. எருவை 14. எறுழம் - எரிபுரை எறுழம் 15. கண்ணி - குறு நறுங் கண்ணி 16. கரந்தை மலர் 17. கருவிளை - மணிப்பூங் கருவிளை 18. காஞ்சி 19. காந்தள் - ஒண்செங் காந்தள் 20. காயா - பல்லிணர்க் காயா 
.
21. காழ்வை 22. குடசம் - வான் பூங் குடசம் 23. குரலி - சிறு செங்குரலி 24. குரவம் - பல்லிணர்க் குரவம் 25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி 26. குருகிலை (குருகு இலை) 27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம் 28. குவளை (மலர்) - தண்கயக் குவளை 29. குளவி (மலர்) 30. குறிஞ்சி 
.
31. கூவிரம் 32. கூவிளம் 33. கைதை 34. கொகுடி - நறுந்தண் கொகுடி 35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை 36. கோங்கம் - விரிபூங் கோங்கம் 37. கோடல் 38. சண்பகம் - பெருந்தண் சண்பகம் 39. சிந்து (மலர்) 40. சுள்ளி மலர் 
.
41. சூரல் 42. செங்கோடு (மலர்) 43. செம்மல் 44. செருந்தி 45. செருவிளை 46. சேடல் 47. ஞாழல் 48. தணக்கம் (மரம்) 49. தளவம் 50. தாமரை - முள் தாள் தாமரை 
.
51. தாழை மலர் 52. திலகம் (மலர்) 53. தில்லை (மலர்) 54. தும்பை 55. துழாஅய் 56. தோன்றி (மலர்) 57. நந்தி (மலர்) 58. நரந்தம் 59. நறவம் 60. நாகம் (புன்னாக மலர்) 
.
61. நாகம் (மலர்) 62. நெய்தல் (நீள் நறு நெய்தல்) 63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 64. பகன்றை 65. பசும்பிடி 66. பயினி 67. பலாசம் 68. பாங்கர் (மலர்) 69. பாதிரி - தேங்கமழ் பாதிரி 70. பாரம் (மலர்) 
.
71. பாலை (மலர்) 72. பிடவம் 73. பிண்டி 74. பித்திகம் 75. பீரம் 76. புன்னை - கடியிரும் புன்னை 77. பூளை - குரீஇப் பூளை 78. போங்கம் 79. மணிச்சிகை 80. மராஅம் 
.
81. மருதம் 82. மா - தேமா 83. மாரோடம் 84. முல்லை - கல் இவர் முல்லை 85. முல்லை 86. மௌவல் 87. வகுளம் 88. வஞ்சி 89. வடவனம் 90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை 
.
91. வள்ளி 92. வாகை 93. வாரம் 94. வாழை 95. வானி மலர் 96. வெட்சி 97. வேங்கை 98. வேரல் 99. வேரி மலர்; 



 மார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாற்று நாயகர்!


வானொலி உங்களில் பலருக்கு உற்ற தோழன், வானொலியைக் கேட்டுக்கொண்டே உறக்கத்தைத் தழுவுவோர் பலர். வானொலியைக் கேட்டுக்கொண்டே கண் விழிப்போரும் பலர். இருபத்தி நான்கு மணி நேரமும் எந்த வினாடியும் அந்த விசையை முடுக்கி விட்டால் போதும் வான் அலைகளில் தவழ்ந்து வரும் இசை உங்கள் செவிகளில் வந்து மோதும். இப்போது இணையம், கைத்தொலைபேசி ஆகியவற்றின் மூலமும் கேட்க முடியும் என்றாலும், காற்றலைகளில் தவழ்ந்து வரும் வானொலியின் ஒலிப்பரப்பை உங்களின் செவிகளுக்கு கொண்டு வந்து சேர்க்க உதவும் முக்கியமான கருவி வானொலிதான். அந்த வானொலியை உலகுக்குத் தந்து அதன் மூலம் நூற்றுக்கணக்கான வானொலி நிலையங்களின் ஒலிப்பரப்பை வான் அலைகளில் உலா வரச்செய்த ஒருவரைப் பற்றிதான் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம்.  

வானொலியையும், கம்பியில்லாத் தந்தி முறையையும் உலகுக்குத் தந்த அவர்தான் 'வானொலியின் தந்தை' என போற்றப்படும் மார்க்கோனி. 1874-ஆம் ஆண்டு ஏப்ரல் 25-ஆம் நாள் இத்தாலியின் பொலொனா நகரில் பிறந்தார் குலீல்மோ மார்க்கோனி. தந்தை வசதி வாய்ந்த தொழிலபதிர். எனவே மார்க்கோனிக்கு மிகச்சிறந்த கல்வி வழங்கப்பட்டது. வீட்டிலேயே தந்தை உருவாக்கியிருந்த சிறிய நூலகத்திலிருக்கும் புத்தகங்களை படித்து மகிழ்வதுதான் மார்க்கோனியின் பிள்ளைப்பருவ பொழுதுபோக்கு. சிறு வயதிலேயே அவருக்கு மின்சக்தி ஆராய்ச்சியிலும், இயற்பியலிலும் அதிக ஆர்வம் இருந்தது. அப்போது புகழ் பெற்றிருந்த விஞ்ஞானிகளான  Maxwell, Hertz, Faraday போன்றவர்களின் கண்டுபிடிப்புகளையும், கருத்துகளையும் மிக விரும்பி படித்தார். தன் வீட்டின் பரணில் ஒரு சிறிய ஆராய்ச்சிக்கூடத்தை சொந்தமாக நிறுவி மின்சக்தி பற்றிய பல ஆராய்ச்சிகளை செய்தார்.



மார்க்கோனிக்கு 20 வயதானபோது கம்பியில்லாமல் ஒலி அலைகளை (Radio Waves) அனுப்புவது பற்றி  Heinrich Hertz என்ற விஞ்ஞானி செய்திருந்த ஆராய்ச்சிகள் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக ஆர்வம் ஏற்படவே அதைபற்றி தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்தார். ஓராண்டிலேயே கம்பியில்லாமல் தந்தி அதாவது டெலிகிராப் ("wireless telegraphy") அனுப்பும் முறையை உருவாக்கினார். அப்போது அவரது கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தை இத்தாலி அரசாங்கம் உணராததால் தாயின் அறிவுரை கேட்டு 1896-ஆம் ஆண்டு லண்டனுக்கு வந்தார் மார்க்கோனி. இங்கிலாந்தின் பிரிட்டிஷ் அஞ்சல் துறை அவரது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்துடன் வரவேற்று அறிமுகம் செய்தது. அதே ஆண்டு தனது கண்டுபிடிப்பான கம்பியில்லா தந்தி முறைக்கு காப்புரிமம் பெற்றார் மார்க்கோனி.


ஒலி அலைகளை வானில் உலா வரச்செய்ய முடியும் என்று நம்பிய மார்க்கோனி அதனை சோதித்துப் பார்க்க என்னவெல்லாம் செய்தார் தெரியுமா? பலூன்களையும், பட்டங்களையும் பறக்க விட்டு அவற்றிலிருந்து சமிக்ஞைகளை பெற முடியுமா? என்றெல்லாம் சோதித்துப் பார்த்தார். பல சோதனைகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் கால்வாய்க்கு அருகில் ஒன்பது மைல் சுற்று வட்டாரத்தில் செய்தி அலைகளை வெற்றிகரமாக அனுப்பியும், பெற்றும் காட்டினார். அப்போது அவரது சோதனைகளைக் கண்டு நகைத்த கூட்டம்தான் அதிகம். ஆனால் ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது. அதனை உணர்ந்ததாலோ என்னவோ தனது சோதனைகளை தொய்வின்றித் தொடர்ந்தார் மார்க்கோனி.



1899-ஆம் ஆண்டு பிரான்ஸில் ஒன்றும், இங்கிலாந்தில் ஒன்றுமாக இரண்டு கம்பியில்லா தொலைத் தொடர்பு நிலையங்களை உருவாக்கினார். 31 மைல் இடைவெளி இருந்த இரண்டுக்குமிடையே ஆங்கில கால்வாய்க்கும் மேலே வெற்றிகரமாக தகவல் பரிமாற்றத்தை செய்து காட்டினார். அவர் உருவாக்கிய கருவிகளின் மகிமையை உணர்ந்த கடற்படை போர்க்கப்பல்களில் அந்தக் கருவிகளை பொருத்திப் பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மூலம் 75 மைல் சுற்றளவில் செய்தி பரிவர்த்தனை செய்து கொள்ள முடிந்தது. 1901-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் பனிரெண்டாம் நாள் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில் ஓர் அபூர்வமான உண்மையை நிரூபித்துக்காட்டினார் மார்க்கோனி. 


வானொலி அலைகள் நேரடியாக செல்லக்கூடியவை என்றும், உலகம் உருண்டை என்பதால் கூடப் போனால் இருநூறு மைல்கள் வரைதான் அவை பயணிக்க முடியும் என்றும் அப்போது நம்பப்பட்டது. ஆனால் உலகின் உருண்டை வடிவத்திற்கும் வானொலி அலைகளின் பயணத்திற்கும் தொடர்பு இல்லை என்று நம்பினார் மார்க்கோனி. அன்றைய தினம் Newfoundland-ன் St. John's தீவில் ஆய்வுக்கூடத்தில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் கருவியை காதுகளில் அணிந்து கொண்டு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். 2100 மைல் தொலைவுக்கு அப்பால் இங்கிலாந்தின் கார்ன்வால் (Cornwall) என்ற பகுதியிலிருந்து அவருக்கு மாஸ்கோட் மூலம் சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன.



தந்தி இல்லாமலேயே காற்றில் உலா வந்த அந்த சமிக்ஞைகள் அட்லாண்டிக் பெருங்கடலைத் தாண்டி மார்க்கோனியின் காதுகளில் ஒலித்தன. உலகின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு ரேடியோ மூலம் செய்திகளை அனுப்ப முடியும் என்பதை அந்த சோதனை மூலம் நிரூபித்துக் காட்டினார் மார்க்கோனி. மூன்று ஆண்டுகள் கழித்து அமெரிக்காவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையே கம்பியில்லா தந்தி முறையை நிறுவிக் கொடுத்தார். அதுவரை தந்தியில்லா கருத்து பரிமாற்றம் எல்லாம் மாஸ்கோட் எனப்படும் குறியீட்டு முறையில் இருந்தன. அதே அடிப்படையில் மனித குரலையும் அனுப்ப முடியும் என்று நம்பிய மார்க்கோனி 1915-ஆம் ஆண்டு அதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.


ஐந்து ஆண்டு முயற்சிக்குப் பிறகு 1920-ஆண்டின் தொடக்கத்தில் நண்பர்கள் சிலரை தாம் தங்கியிருந்த படகு இல்லத்திற்கு வரவழைத்து இசை விருந்தளித்தார். அந்த இசை நிகழ்ச்சி வானொலி வழியே லண்டன் மாநகரில் ஒலிப்பரப்பபட்டது. வானொலியும் பிறந்தது. தொடர்ந்து அவர் செய்த ஆய்வின் காரணமாக 1922-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் நாள் இங்கிலாந்து வானொலி நிலையம் செயல்படத் தொடங்கியது. ஒலி அலைகளைப் பரப்புவதில் மகத்தான சாதனை புரிந்த மார்க்கோனிக்கு 1909-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பல பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு அவருக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கின.




வானொலி என்ற சக்தி வாய்ந்த ஆயுதத்தை உலகுக்குத் தந்த மார்க்கோனி 1937-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் நாள் தமது 63-ஆவது அகவையில் ரோம் நகரில் காலமானார். சுமார் எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை மகிழ்வித்து வந்திருக்கிறது வானொலி. வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி தகவல் களஞ்சியமாகவும் அது செயல்பட்டு வருகிறது. தொலைக்காட்சி, இணையம் என்று பல தொடர்பு சாதனங்கள் வந்தாலும் இன்றும் பலரது வாழ்க்கையில் வானொலிக்கு என்று ஒரு தனி இடம் உண்டு. வானொலியில் ஒரு நல்ல நிகழ்ச்சியை கேட்ட பிறகு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் உண்மையில் மார்க்கோனிக்குதான் நன்றி சொல்ல வேண்டும்.

மார்க்கோனியின் விடாமுயற்சியால்தான் அதுவரை நிசப்தமாக இருந்த வானம் அதன் பிறகு குரல் மூலமும், இசை மூலமும் பேசத் தொடங்கியது. வான் அலைகளுக்கு உயிரூட்டிய மார்க்கோனியின் கதை நமக்கு சொல்லும் உண்மை எளிதானதுதான் தொலைநோக்கும் விடாமுயற்சியுடன் சேர்ந்த கடின உழைப்பும் இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இதே பண்புகளை பின்பற்றும் எவருக்கும் அந்த வானம் நிச்சயம் வசப்படும். ; 




 பகுத்தறிவில்லாத எந்த உயிரினமும் தன் இனத்தை வருத்தி வாழ்வதில்லை.
தன் இனத்தை கீழ்மைப்படுத்துவதில்லை.
தன் இனத்தின் உழைப்பாலையே வாழ்வதில்லை.
தன் இனத்தின் மீது சவாரி செய்வதில்லை.
பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தை கீழ்மைப்படுத்துகிறான்.
வாகனமாய் உபயோகப்படுத்துகிறான்.
சோம்பேறியாயிருந்து தன் குலத்தின் உழைப்பிலேயே வாழ்கிறான்.
பாடுபட ஒரு கூட்டமாகவும் - பயன் அனுபவிக்க இன்னொரு கூட்டமாகவும் பிரிந்து கொள்ளுகிறான்.
உதாரணமாக நாய், பன்றி, கழுதை போன்ற மிருக கூட்டத்தில் சாதிப்பிரிவுகள் கிடையாது.
மனித வர்க்கத்தில் தன் இனத்தையே சாதி ரீதியாக பிரித்து இழிவுப்படுத்துவதான செயல் நடைபெறுகின்றது.



 கார்டு தேய்க்கும் கருவிகளைப் (POS கருவிகள்) பெறுவது எப்படி


//இந்தியாவில் நகரங்கள், நகர்ப்புற பகுதிகளைவிட கிராமங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இருந்தாலும் கூட, கடந்த 5 ஆண்டுகளில் வங்கிகளின் பற்று அட்டை ("டெபிட் கார்டு'), கடன் அட்டை ("கிரெடிட் கார்டு') தேய்க்கும் சிறிய கருவிகள் (பி.ஓ.எஸ். எனப்படும் "பாயின்ட் ஆஃப் சேல்' கருவிகள்) மூலம் பணப் பரிவர்த்தனை 300 மடங்கு அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 2012-இல் 7.41 லட்சமாக இருந்த பற்று அல்லது கடன் அட்டை தேய்க்கும் கருவிகளின் எண்ணிக்கை, 2016-இல் 12 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்த "பாயின்ட் ஆஃப் சேல்' கருவிகளைப் பெற்றுத் தங்களது கடைகளிலும், நிறுவனங்களிலும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளில் வர்த்தகர்கள் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகள் வங்கிகளில் இப்போது அதிகரித்துள்ளன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

நாட்டின் மிகப் பெரிய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தனியார் துறையில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, மற்றும் இந்தியன் வங்கி, எச்.டி.எஃப்.சி. வங்கி உள்ளிட்டவை இத்தகைய "பிஓஎஸ்' கருவி வசதியை அளித்து வருகின்றன.
இந்தக் கருவி வசதியைப் பெற குறிப்பிட்ட வங்கியில் நடப்புக் கணக்கைத் தொடங்க வேண்டும். அந்த வங்கிக் கணக்கில் மூன்று மாத சராசரியாக ரூ.5,000 டெபாசிட் தொகையைப் பராமரிக்க வேண்டும். அந்த நிறுவனம் "பாயின்ட் ஆஃப் சேல்' கருவி வேண்டும் என்று விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் கடையிலோ அல்லது நிறுவனத்திலோ தரைவழி தொலைபேசி இணைப்புடன் "பி.ஓ.எஸ்.' கருவியை வங்கி நிர்வாகமே இலவசமாக அமைத்துக் கொடுக்கும்.

ஒரு பொருளை வாங்கும் நுகர்வோர், ரொக்கத்துக்கு பதிலாக, அவரது பற்று அட்டையைப் பயன்படுத்தும் வசதியை இந்த "பி.ஓ.எஸ்.' கருவி அளிக்கிறது. இதன் மூலம் நுகர்வோர் - வணிகர் என இருவருக்கும் ஒரே நேரத்தில் பலன் கிடைக்கிறது. மேலும் பற்று அட்டை மூலம் நுகர்வோர் அளித்த தொகை வணிகரின் வங்கிக் கணக்கில் உடனடியாக சேர்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல், தொகை வந்து சேர்ந்ததற்கு அந்த வங்கியிலிருந்து வணிகரின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவலும் அனுப்பப்படுகிறது. மின்னணு முறையில் வணிகத்துக்கான பணப் பரிவர்த்தனைக்கு ஆதாரம் கிடைத்துவிடுகிறது. மாதந்தோறும் வங்கியிலிருந்து வரவு அறிக்கையும் அளிக்கப்படும். மேலும், அன்றாட விற்பனைத் தொகையை கடையில் அல்லது நிறுவனத்தில் ரொக்கமாக வைப்பதால் ஏற்படும் திருட்டு - கொள்ளை தடுக்கப்படுகிறது.//

நன்றி - தினமணி 21.11.2016; 





 📕 " ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. ✔ 

📕 " அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே .✔ 

📕 " கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . ✔ 

📕 " கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. . ✔ 

📕 " அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது . ✔ 

📕 " காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. ✔ 

📕 " உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று . ✔ 

📕 " அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் . ✔ 

📕 " என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது . ✔ 

📕 " மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை என்று . ✔ 

📕 " ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு சிறையில் பூட்டி வைத்திருக்க செய்கிறது . ✔ 

📕 " இந்த மிருக காட்சி சாலை முழுதும் நான் பார்த்ததில் , காகம் மட்டுமே பூட்டி வைக்கப்பட வில்லை .. ✔ 

📕 " எனவே நான் யோசித்தது , நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே , என்றது . ✔ 

📕 " இதுதான் நமது பிரச்சினையும் ...✔ 

📕" நாம் தேவை இல்லாமல் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நம்மை நாமே கவலை கொள்ள செய்கிறோம் . ✔ 

📕 " நாம் எப்பவும் இறைவன் கொடுப்பதை வைத்து சந்தோசம் கொள்வது இல்லை . ✔ 

📕 " அவன் கொடுத்ததை மதிப்பதும் இல்�; 





 பணநீக்கம் என்னும் கொடுங்கனவு
- எம்.எஸ். ஸ்ரீராம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். ஆங்கிலக் கட்டுரை இணைப்பு கீழே.

ரூபாய் நோட்டுகளை செல்லாதென அறிவித்த டீமானிடைசேஷன் என்னும் நடவடிக்கையின் விளைவுகள் வெளித்தெரியத் துவங்கி விட்டன. ஆனால், நமக்குக் காணக் கிடைப்பது நம் அண்டைப் பகுதிகளில் ஏற்பட்ட விளைவுகள் மட்டுமே – பெரும்பாலும் ஊடகங்கள் சென்றடையக்கூடிய நகர்ப்புறப் பகுதிச்செய்திகள் மட்டுமே.
நாட்கள் செல்லச்செல்ல வேளாண்மைச் சந்தைகள் எப்படி சீர்குலையும், சரக்கு லாரிகள் எப்படித் தேங்கி நிற்கும், பொருளாதாரச் செயல்பாடுகள் எப்படி மந்தமடையும் என்பதையெல்லாம் பார்க்கப் போகிறோம். நாட்டின் நன்மைக்காக இதையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்று நமக்குக் கூறப்படுகிறது. இந்த வாதம் பெரும்பாலும் அபத்தமானது. கணக்கில் வராத செல்வம் வைத்திருக்கிறவர்களை இது பாதிக்கும் என்றாலும், நேர்மையாக வரி செலுத்துபவரை அதைவிடப் பன்மடங்கு பாதிக்கிறது.
பண நோட்டின் முக்கியத்துவம் என்பது, அதை மாற்றக்கூடிய தன்மையில்தான் இருக்கிறது. (பணத்தைக்கொடுத்து பொருளை வாங்கலாம், பொருளைக் கொடுத்து பணத்தை வாங்கலாம், பண நோட்டைக் கொடுத்து வேறு நோட்டுகளை வாங்கலாம்.) இதர எல்லா சொத்துகளும் குறிப்பிட்ட வகையைச் சேர்ந்த சொத்துகள் – அவற்றுக்கு உடைமையாளன் என்ற அடையாளம் உண்டு. செல்பேசியோ, சீறிப்பாயும் மோட்டார் பைக்கோ, அந்த சொத்துக்கு உரிமையாளன் என்ற அடையாளம் கொண்டவை. ஆனால் பண நோட்டு என்பது, அதை வைத்திருப்பவருக்குச் சொந்தமானது, கை மாறும்போது மாறுபவருக்குச் சொந்தமாகிறது. அரசு அறிவித்த திடீர் நடவடிக்கை, மாற்றப்படக்கூடிய சொத்தினை குறிப்பிட்டதொரு நிலைச் சொத்தாக மாற்றுகிறது – சிறிது காலத்துக்குத்தான் என்றாலும்கூட, பண நோட்டுகள் வைத்திருப்பவரின் அடையாளத்துடனும் வருவாயுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்குவோரின் விரலில் மை வைக்கும் அபத்தமான செயல், பண நோட்டின் இயல்பையே மாற்றுகிறது. கணக்கு வைக்கப்பட்டு, வரி விதிக்கப்படக்கூடியதாக கையில் இருக்கும் வருவாய் மற்றும் பரிமாற்றத்துக்கான ஊடகமாகச் செயல்படுகிற, கையில் வைத்திருக்கிற பண நோட்டு — வருவாய்-பண நோட்டு இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
வாகனத்தை ஓட்டும் ஒவ்வொரு டிரைவரும், தான் சிவப்பு விளக்கை மீறவில்லை என்று பிரகடனம் செய்ய வேண்டும் என்று சொன்னால் எவ்வளவு அபத்தமாக இருக்கும்? அதே அளவுக்கு அபத்தம்தான் தன்னிடம் இருக்கும் பண நோட்டு நேர்மையான வழியில் வந்ததுதான் என்று நிரூபிக்க வேண்டும் என்று குடிமக்கள் அனைவரையும் வரிசையில் நிற்க வைப்பதும். பண நோட்டில் அரசின் உறுதிமொழி இருக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை, “இந்த ரூபாய் நோட்டை வைத்திருக்கும் நபருக்கு ..... ரூபாய் தருவதாக உறுதியளிக்கிறேன்” என்று பண நோட்டில் எழுதப்பட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் கையெழுத்திட்ட அந்த உறுதிமொழியை உடைத்தெறிந்து விட்டது.
செலுத்தப்பட வேண்டிய குறிப்பிட்ட காலத்தில் செலுத்தப்படாத கடனுக்கு டிஃபால்ட் என்று பெயர். குறுகிய காலத்துக்கே என்றாலும், தன் குடிமக்களுக்கு அளித்த உறுதிமொழியை மீறி மிகப்பெரிய தவறிழைத்ததாக – டிஃபால்டராக இருப்பது அரசுதான். பண நோட்டு வைத்திருப்பவருக்கு அதற்கான தொகை தராதபோது, ரிசர்வ் பேங்க் தனது உறுதிமொழியிலிருந்து டிஃபால்ட் ஆகிறது. குறிப்பிட்ட காலத்துக்கு அந்த உறுதிமொழியை செயல்படுத்த மாட்டோம் என்று சொல்வதே மோசமானதுதான்; ஆனால், வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட, கணக்கில் வைக்கப்பட்ட பணத்தைக்கூட வாடிக்கையாளர் தன் விருப்ப்ப்படி பெற முடியாது என்று சொன்னால், அது தீயது, ஒழுக்கக்கேடானது.
திரைப்படத்துக்கு, கோவிலில் தரிசனத்துக்கு, மதுபானம் வாங்குவதற்கு நிற்கிறபோது தன்னுடைய சொந்தப்பணத்துக்காக வரிசையில் நின்று தேசபக்த பட்டயத்தை வாங்கி ஒட்டிக்கொள்ளக்கூடாதா என்று கேட்கிறார்கள். இங்கே முக்கியமான கேள்வி — எத்தனை காலம் நிற்க வேண்டும்? எப்போது எனக்கு அந்த தேசபக்தப் பட்டயம் கிடைக்கும்?
நடவடிக்கை ஆரம்பித்தது முதலாகவே நெருக்கடியின் பரிமாணங்கள் சாமானியர்களுக்குக்கூடத் தெரிந்து விட்டது. இப்படியொரு மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கும்போது இரண்டு விஷயங்கள் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் : மாற்றாகத் தர வேண்டிய பண நோட்டுகள் போதுமான அளவுக்கு அச்சிடப்பட்டு, சுற்றுக்கு விடப்படக்கூடிய அளவுக்கு கையிருப்பில் தயாராக உள்ளதா? குறைந்த கால அவகாசத்துக்குள் இதைச் செய்துமுடிக்க்க்கூடிய நெட்வொர்க்கும் லாஜிஸ்டிக்சும் தயாராக இருக்கிறதா?
இந்த இரண்டு கேள்விகளுக்கும் கிடைக்கிற விடை “இல்லை” என்பதே. ஒற்றை வரி அறிவிப்பால் செல்லாதென ஆகிவிட்ட பண நோட்டுகளுக்கு ஈடாக புது நோட்டுகளை அச்சடித்து விநியோகிக்க 2017 மே மாதம் வரை காலம் எடுக்கும் என்று திட்டக்குழுவின் முன்னாள் உறுப்பினர் சௌமித்ர சவுத்ரி கணக்கிட்டுக் கூறியிருக்கிறார். தேசபக்தியைக் காட்ட இந்த ஆறு மாதங்கள் போதுமா? ஆறு மாதங்களுக்குப் பிறகாவது நம் தேவைக்கேற்றபடி, அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ப சில்லறையாக ரொக்கப் பணம் கிடைக்குமா?
ரூபாய் நோட்டு விநியோக லாஜிஸ்டிக்ஸ் இப்போது அதன் முழுத்திறனில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், பயன் முழுக்க்க் கிடைக்கவில்லை என்பதை எல்லா வங்கிக் கிளைகளிலும் ஏடிஎம்களிலும் பார்க்க முடிகிறது.
இந்த “துல்லியத் தாக்குதலுக்கு” அரசு இயந்திரம் தயாராக இருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கையில் போதுமான அளவுக்கு பண நோட்டு இருப்பு இருக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், மாற்றித் தர நான்கு மாதங்கள் பிடிக்கும் என்பது கடந்தவார செயல்களிலிருந்து புரிகிறது. இது மிக மோசமான திட்டமிடலாகும்.
மோசமான திட்டமிடல், மோசமான செயல்படுத்தல் இவற்றின் விளைவுகள் எல்லாருக்கும் தெரிகின்றன. சுமார் 60 பேர் உயிரிழந்தார்கள். அடுத்தடுத்து வந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட வேளாண் துறை, மனித்த் தவறின் விளைவான பேரிடரையும் எதிர்கொள்ளப்போகிறது. விளைபொருட்களை விவசாயிகள் விற்க முடியவில்லை, இருப்புகளை லாரிகள் ஏற்றிச்செல்ல முடியவில்லை. தற்போதைக்கு உணவுப் பொருட்கள் மற்றும் விலைகளில் இதன் தாக்கம் இருக்கும்.
ஜன்-தன் திட்டத்தில் வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டபோது, ஏழைகள் வங்கிச்சேவையில் சேர்க்கப்படுகிறார்கள், அவர்களுக்குப் பயன் கிடைக்கும், தொழில்நுட்பத்தின் வரம் என்றெல்லாம் பார்ட்டிக்கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளி தன் மனைவி/தந்தை/சகோதரன் கணக்கில் பணம் போட முடியாது. அப்படிச் செய்வதற்கு அங்கீகாரக் கடிதம் தேவை என்றாகி விட்டது.
ஏழை குடும்பத்தலைவி அவசரத்துக்காக சிறுகச் சிறுக சேர்த்துவைத்த பணத்தை பயன்படுத்த முடியவில்லை. அடையாள அட்டை இல்லை, அல்லது வங்கிக்கணக்கு இல்லை. அரசு திருதிருவென விழிப்பது நாளும் பல்டியடிக்கும் அதன் அறிவிப்புகளிலிருந்தே தெரிகிறது. பழைய நோட்டுகளைக் கொடுத்து 4000 ரூபாய் மாற்றுவதை ஒரு தடவைதான் செய்யலாம் என்று வரம்பு ஏதுமில்லை என்று சொன்னார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. ஆனால், லாஜிஸ்டிக்ஸ் காரணமாக, வங்கிகள் தேவைப்பட்டால் இதை கட்டுப்படுத்தலாம் என்றார். அடுத்த நாளே ஒரு முறைதான் மாற்ற முடியும் என்றானது. அத்துடன். விரலில் மை வைக்கப்படும் என்றார்கள். அடுத்த நாளே அது 2000தான் என்றாகி விட்டது.
இப்போது பெட்ரோல் பம்ப்களில் டெபிட் கார்டுகளை தேய்த்து பணம் எடுக்கலாம் என்கிறார்கள். (எல்லா பெட்ரோல் பம்ப்களிலும் இது கிடையாது.) ஓரளவுக்குத்தான் பயன்தரும் என்றாலும் இது வரவேற்கத்தக்க விஷயம். ஆனால், புழக்கத்துக்கான சில்லறை நோட்டுகள் இல்லை என்ற அடிப்படைப் பிரச்சினையை இது தீர்க்கவில்லை. இப்போதைய குழப்ப நிலையை நியாயப்படுத்த அரசு கையிலெடுக்கும் ஒரே ஆயுதம் – ரகசியம். ஆக, ரகசியம் என்ற காரணத்தால், அரசில் முடிவெடுத்தவர்கள் அறிவார்ந்த ஆலோசனைகள் அல்லது கருத்துகளை கேட்கவே இல்லை என்று தெளிவாகிறது. அப்புறம் குழப்பநிலை ஏற்பட்டதில் வியப்பேது?
பணநோட்டுப் பற்றாக்குறையும், அதன் விளைவாக ஏற்பட்ட குழப்பமும் சேர்ந்து, மோசடிக்காரர்கள் சந்தையில் இருக்கும் சமநிலையின்மையைப் பயன்படுத்திக் கொள்ள வழி செய்கிறது. இந்த ‘துல்லியத் தாக்குதல்’ கணக்கில் வராத வருவாயை இன்னும் உருவாக்குகிறது இல்லையா? இதுதான் கேவலமான முரண்.

 #இறைவன் என்று ஒன்று உண்டா....??


ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் தன் மாணவர்களிடம் ஒரு வித்தியாசமான கேள்வியைக் கேட்டார்
“ இறைவன் என்று ஒன்று உண்டா?”
என்பதுதான் அந்தக்கேள்வி. அனைவரும் அமைதிகாக்க, ஒரு மாணவன் மட்டும் எழுந்து “ஆம் ஐயா… இதிலென்ன சந்தேகம்?” என்றான்.
அவர் தொடர்ந்து “உலகைப் படைத்தவர் அவர்தானா?” என்றார். மாணவர் பதிலுக்கு “ஆம்” என்றான். அவர் “கடவுள் நல்லவரா?… கெட்டவரா?…” என்று தொடர்ந்து கேட்க, “நல்லவர் … மிகவும் நல்லவர் ” என்று அந்த மாணவனும் பதிலளித்தான்.
“கெட்டவைகள் உலகில் உண்டா?” என்றார் பேராசிரியர். 
மாணவனும் தொடர்ந்து “ஆம் அவைகளும் உண்டு” என்றான்.
“ கடவுள் தான் கெட்டவைகளையும் சாத்தானையும் படைத்தாரா…?” என்று கேள்வி வந்தது பேராசிரியரிடமிருந்து. “ஆம்” என்பதுதான் இதற்கும் அந்த மாணவனின் பதில்.
“கடவுள் கெட்டவைகளைப் படைத்தார் … கெட்டவைகள் இந்த உலகத்தில் உள்ளன! கடவுளால் படைக்கப்பட்டதால் அவரின் ஏற்பாட்டின்படிதான் அவைகள் செயல்படுகின்றன; எனவே #கடவுளும் கெட்டவர்தானே…?” என்றார். 
இதற்கு அந்த மாணவன் தலைகுனிந்தபடி நின்றிருந்தான்
பேராசிரியர் தொடர்ந்தார்,”கெட்டவரை எந்த நம்பிக்கையில் கடவுள் என வணங்குகிறீர்கள், உங்களுக்கு அந்த நித்திய நம்பிக்கை எப்படி வந்தது… எல்லாம் ஒரு மாயைதான் என்று நீ ஒப்புக்கொள்ள வேண்டுமல்லவா?”.

பேராசிரியர் முடிப்பதற்கு முன்னால் எழுந்த இன்னொரு மாணவர்,
“ஆசான் அவர்களே… நான் ஒரு கேள்வி உங்களைக் கேட்கலாமா?” என்றான். “கண்டிப்பாக…” என்று மாணவனை மடக்கிய இறுமாப்புடன் பேராசிரியர் கூற, தொடர்ந்தான் மாணவன்,
“குளிர் என்று ஒன்று உண்டா இந்த உலகத்தில்?”. “என்ன கேள்வி இது? உறுதியாகச் சொல்வேன்… உண்டென்று; உனக்குக் குளிர் அடிப்பதில்லையா?” பதில் வந்தது பேராசிரியரிடமிருந்து. அந்த மாணவனின் கேள்விக்கு அனைவரும் சிரித்தனர்.
“இல்லையென்று நான் சொல்வேன். இயற்பியல் விதிகளின் படி வெப்பமின்மையைத் தான் நாம் குளிர் என்கிறோம். ஒவ்வொரு ஊடகமும் வெப்பத்தைத்தான் கடத்தும்.
குறைந்த வெப்பநிலையைத் தான் குளிர்ச்சி எனச்சொல்கிறோம். ஆதாவது, 0 டிகிரி செல்சியஸ் எனப்படுவது முழுக்க வெப்பமின்மை”. அனைவரும் அமைதியானார்கள்.
மாணவன் மட்டும் தொடர்ந்தான்,

” ஆசானே… இருட்டு என்று ஒன்று உண்டா?”. பேராசிரியர் இப்பொதும் “கண்டிப்பாக உண்டு” என்றார்.
“மறுபடியும் தவறான பதிலைச் சொல்கிறீர் ஆசானே…
இருட்டு என்று ஒன்று கிடையாது, ஒளியின் இல்லாமையைத்தான் நாம் இருட்டு என்கிறோம்.
ஒளி என்ற ஒரு சக்தியைப் படிக்க முடியும்; ஆனால் இருட்டை… முடியவே முடியாது.
ஒளியில்லாமல் போனால் இருட்டு இருக்கும், வெப்பமில்லாமல் போனால் குளிரெடுக்கும்”
மாணவன் ஒரிரிரு வினாடி பேசுவதை நிறுத்தினான்.

அறையெங்கும் ஒரே அமைதி.
மாணவன் தொடர்ந்தான
“அதுபோலவே, கெட்டவைகள் என்று உலகில் ஒன்று கிடையாது. கடவுளின் தன்மை எங்கெல்லாம் இல்லாமல் போகிறதோ அங்கெல்லாம் கெட்டவைகள் தோன்றும்.
சாத்தான்கள் என்பவை இருட்டு மற்றும் குளிர் போல;
தான் எங்கே இல்லாமல் போனாலும் என்னாகும் என்பதை 
மனிதனுக்கு விளக்கக் கடவுளால் படைக்கப்பட்டவை
கடவுளின் தன்மைகளான அன்பும் கருணையும் மனதில் இருத்தாமல் இருந்தால் அவனின் வாழ்வில் எவ்வளவு மோசமான விளைவுகள் வரும் என்பதைக்காட்டவே
கடவுள் இருட்டை, குளிரை, கெட்டவைகளை மற்றும் சாத்தானைப் படைத்தார்;
இவைகள் அனைத்தும் கடவுளின் படைப்புக்கள் மற்றும் அவதாரங்களே!”.
மாணவன் சொல்லி முடித்ததும் ஆசிரியர் முகம் தொங்கிப்போய் உக்கார்ந்தார்.

அந்த மாணவன் வேறு யாருமல்ல .....பிற்காலத்தில்,
இயற்பியலின் அடிப்படை கோட்பாடான " பொதுச் சார்புக் கோட்பாட்டை (#General_Theory_of_Relativity) உலகுக்கு தந்த 
மாபெரும் அறிவியல் மேதை #ஆல்பர்ட்_ஐன்ஸ்டீன் என்பவராவார் ...!; 







பூமியில் இருப்பதும்  வானத்தில் பறப்பதும்  அவரவர் எண்ணங்களே...


1975-இந்திய   திரைப்பட  வரலாற்றில்  ஓர் மைல் கல்  ...

' ஷோலே '

இதில் கதாநாயகர்களாக நடித்தவர்கள் இருவர்...

ஒருவர்   தர்மேந்திரா.  அக்காலகட்டத்தில்   கனவு நாயகன்...

மற்றொருவர்  அமிதாப்  .வளர்ந்து கொண்டிருந்தஇள நடிகன்...

இப்பட வெற்றிக்கு பின்  கொஞ்சம் கொஞ்சமாக மார்கெட்டை இழந்தவர் தர்மேந்திரா...

ஆனால்   விடாமுயற்சி  தன்னம்பிக்கை  துணை கொண்டு...

இன்று வரை   இந்தி திரை உலகில்    மிகப்பெரிய ஆளுமையுடன்...

வலம் வந்து கொண்டிருப்பவர்    அமிதாப்...

1982 - கூலி   படப்பிடிப்பில்   மாபெரும் விபத்தில்   தப்பி பிழைத்தவர்...

ABCL என்னும்    நிறுவனம் தொடங்கி  மிகப்பெரிய  நட்டத்த  சந்தித்தவர்...

தொலைகாட்சி  தொடர்களில்  Ego பார்க்காமல்   நடித்தவர்...

அரசியலிலும்  சில காலம்   இருந்தவர்...

இன்றும்   Big - B என   எல்லோராலும்  அழைக்கப்பட்டு  வருபவர்...

இவ்வளவிற்கும்  காரணம்  ஒன்றேதான்...

அனைத்து  நிலையிலும்  தன்னை  மேம்படுத்தி   கொண்டே   இருந்ததுதான்...

Updating...
Upgrading...
Latest version...

என்னும்  வார்த்தைகளின்   ஒரே பொருள்...

- மேம்படுத்துதல் -  என்பதே...

வாங்க...

ஒவ்வொரு    நாளும்...
ஒவ்வொரு    நொடியும்...

நம்மை நாம்மேம்படுத்தி...

நாமும்  நல் வாழ்வு வாழ   தொடங்குவோம்...




 *🎀🎀🎀🎀உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி...வாழ்த்துக்கள்..💐💐💐*


*11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்* 

*அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார்.* 

*தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர்.*

இவரது திறமையை அறிந்த *Indian Overseas Bank* நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு *வயது 12 தான்.*

 *அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்*.


தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, 
*ஓர் இந்தியர். அதுவும் தமிழர்.* 
*ஆம்! உண்மை தான்.* *தமிழனின் மூளை தரணியையே வெல்கிறது*

*HCL நிறுவனம் The Pride of India - Visalini என பாராட்டிய போது அவருக்கு வயது 11*. 

*TEDx சர்வதேச மாநாட்டில் தலைமை உரை ஆற்றிய விசாலினி 11 வயதில், The Youngest TEDx Speaker என்ற பட்டமும் பெற்றார். London, World Records University, Dean தாமஸ் பெய்னிடம் பாராட்டு பெற்றார் விசாலினி.*

*Times Now English News நிறுவனமோ ஒருபடி மேலாக விசாலினியின் வீட்டிற்கே வந்து 2 நாட்கள் தங்கி அவரைப் பற்றிய தகவல்களைத் திரட்டி, The Amazing Indian - Visalini என அரை மணி நேர Documentry*
*படத்தை ஒளிபரப்பியது.*

*நியூ சவுத் வேல்ஸை தலைமையிடமாகக் கொண்டு, காமன் வெல்த் ஆப் ஆஸ்திரேலியாவால் தொடங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் முன்னணிச் செய்தி நிறுவனமான SBS ஆஸ்திரேலியா,* *உலகின்*
*74 மொழிகளில் 174 நாடுகளில்* *விசாலினியின்* *அரைமணி நேர பேட்டியை ஒலிபரப்பி* *கௌரவப் படுத்திய* *போது *விசாலினிக்கு*
*வயது 13 தான்.*

ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விசாலினியின் தந்தைக்கு வந்தது
 *ஒரு Phone Call. Our Prime Minister Mr.Modi wants to meet your Daughter Visalini என்று.* 

*பிரதமரைக் கண்ட விசாலினி, எழுந்து நின்று தமிழில் வணக்கம் என்று சொல்ல, பதிலுக்கு தமிழிலேயே வணக்கம்*

*என்றார்* *பிரதமர் மோடி. பிரதமர் மோடி*

 *விசாலினியுடன் உரையாடிய போது, இந்தச் சிறுவயதில் நீ செய்துள்ள சாதனைகளே, இந்திய நாட்டிற்கான சேவைதான் என்று நெகிழ்ந்து பாராட்டினார்.*

*திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் கருணாகரனோ,* *விசாலினி இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் முக்கியப் பங்காற்றுவார்* 
என்று பெருமை பொங்க வாழ்த்தினார்.

*உலக அளவில் பாராட்டு பெற்றுள்ள விசாலினிக்கு, தான் இன்னும் தமிழக முதல்வரின் பாராட்டைப் பெற வில்லையே என்பது மிகப்பெரிய ஆதங்கம்.

*உங்களுக்குத் தெரியுமா, சாதாரண மனிதர்களின் அறிவுத்திறன் 90 முதல் 110 வரை இருக்கும். கம்ப்யூட்டர் ஜாம்பவான் பில்கேட்ஸுக்கு IQ level 160. ஆனால் விசாலினியின் IQ level 225. உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த விசாலினி, நம் இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்*. உலகிலேயே இல்லை இப்படி ஒரு குழந்தை என்று சாதித்துக் கொண்டிருக்கும் விசாலினியின் தந்தை ஓர் எலக்ட்ரீசியன். தாத்தாவோ வெல்டராக இருந்து, பின் தமிழாசிரியராக ஆனவர்.
*இந்தத் தமிழ்மகள் பெருமையை தரணி எங்கும் பறைசாற்றுங்கள்*👌👏👏💐💐🌺🙏.                     https://propelsteps.wordpress.com/2013/08/20/appreciate-talents-vishalini-13yr-old-girl-with-iq-of-225-a-world-record/; 






No comments:

Post a Comment