Friday, December 23, 2016




                              மரங்களின் சிறப்பு 


 புதிய தலைமுறை விவாதத்தில் ஒரு சூழலியலாளர் மரங்களின் சிறப்பைப் பற்றி இப்படி விளக்கினார்: "மரங்கள் என்பவை நம் நுரையீரலின் இன்னொரு பகுதி... பாதி நுரையீரல்தான் நம்ம உடம்பில் இருக்கு.. இன்னொரு பாதி மரங்களாக வெளியில் இருக்கு... நாம் வெளியிடும் காற்று அதன் உள் காற்று... அதன் வெளிக் காற்று நம் உள் காற்று...."

என்ன ஒரு உணர்வு பூர்வமான விளக்கம்!!

பள்ளிக் குழந்தைகளை கேட்டுப்பாருங்கள்.... "மரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன......." என்று கல்யாண வீட்டில் மந்திரம் ஓதும் புரோகிதர் போல் சுரத்தே இல்லாமல் ஒப்பிப்பார்கள்...

மாறாக "மரம் என்பது நம் ரத்தத்தின் ரத்தம்..... நம் உடலின் ஒரு அங்கம்" என்று குழந்தைகளின் மனதில் பதிய வைத்தால் அவரகள் மரத்தை மறப்பார்களா?;





 Text: உலகம்  எழும் முன், நீ எழுந்தால் உலகையே வெல்லும்  தகுதி உன்னை வந்து சேரும்....


நம்பிக்கையோடு உறங்கப் போ,
நாளை நற்பொழுதாய் விடியும்..


                                    அரியலூர்    

இன்று....
அரியலூர் கு 226 வது மலர்ந்த தினம்.1790ம் ஆண்டு இதே நாளிvல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய. கம்பெனியாள் உருவாக்கப்பட்டதுதான் நமது அரியலூர்
அரி=மதிப்பு ,
யல்+நெல் =உணவு, ஊர்=பாதுகாப்பு.
ஏன் அரியலூர் பிரசித்தம் பெற்றது? தெரியுமா உங்களுக்கு ? 10 சிறப்பம்சம்களை சொல்லுகிறேன் மற்றவர்களுக்கு சொல்லி பெருமைபட்டு கொள்ளுங்கள்...!!!
1-பல்லவ மன்னர்கள் வாழ்ந்த முதல்(1st) #இந்திய நகரம்
2- தமிழகத்தின் முதல் அதிக சிமென்ட் ஆலை பெற்ற நகரம்
3- தமிழ்நாட்டின் மூன்றாவது(3rd) பெரிய தேரை கல்லங்குறிச்சி பெற்ற நகரம்
4- நான்கு(4th) ரத வீதிகளில் இருந்து வளர. ஆரம்பித்த நகரம்
5- ஐந்து(5th) வகையான #நிலங்கள் பெற்ற தமிழகத்தின் ஒரே மாவட்டத்தின் நகரம்
6- தமிழ்நாட்டின் ஆறாவது(6th) மிக நல்ல மனிதர்கள் இருக்கும் நகரம்
7- சரிகமபதநிச என்ற ஏழு(7th)
ஸ்வரங்கள் பாடும் #இசைத்தூண்களை கொண்ட ஒரே நகரம்
8- தினசரி எட்டு(8th) லட்சம் மக்களால் இயங்கிக் கொண்டிருக்கும் பெரு நகரம்
9- ஒன்பது(9th) கி.மீ சுற்றளவு கொண்ட நகரம்
10- தமிழகத்திலேயே அதிகமாக பத்து(10th) அணைகளை கொண்ட #செழிப்பான மாவட்டம்
ராஐராஐன் சீமை என்றும் அழைக்கப்படும் அரியலூர், மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி தமிழ் ஆகும். இவ்வழக்கை அரியலூர் தமிழ் என்றும் அழைப்பர்.
தமிழ் மொழி #பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே தமிழாகும். எனவே அரியலூர் #தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை '#அண்ணாச்சி' என்று அழைக்கும் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. வழக்கிலும் அவ்வாறே.
⚔பழகி பார் பாசம் தெரியும்...!
⚔பகைத்து பார் வீரம் தெரியும்...!
⚔நாங்க அரியலூர்காரங்க...!
⚔சித்தர்களில் சிறந்த #அகத்தியர் வளர்ந்த இடம் -
⚔காப்பியத்தின் மன்னன் சோழன் வளர்ந்த இடம் -
⚔வீரத்தின் அடையாளம்
⚔தியாகத்தின் தியாகி #பிறந்த இடம் -
⚔நாளிதழ்களின் அரசர் #சிவந்தி #ஆதித்தனார் பிறந்தது -
⚔கலைத்துறையின் #singam சோழன் கட்டூய சோழபுரம்
⚔ தமிழகத்தை அண்ணார்ந்து பார்க்க வைத்த நிகழ்ச்சி "நீயா நானாவின்" இயக்குனர்& தாயாரிப்பாளர் அரியலூர்
⚔ அரியலூர்காரன் சாதிக்காத துறையும் இல்லை, கலையும் இல்லை...
⚔தாகத்துக்கு மருதைஆறு
⚔அருவிக்கு - நீரோட்டம்
⚔தென்றலுக்கு - கிராமம்
⚔பறவைக்கு கரைவெட்டி
⚔அழகுக்கு க்கு பெண்கள்
⚔படிப்புக்கு - நிர்மலா பள்ளி
"ஆளை புடிக்க பாசம்"
"ஆளை முடிக்க அருவா "
⚔தமிழுக்காக அன்றும் இன்றும் பாடுபடுவதில் அரியலூர் ரத்தங்களுக்கு என்றும் பெரிய பங்கு உண்டு...
சிமென்ட் city
Neenga hotel home katta
Naanga cement tharom
வந்தவர்களை தான் சென்னை வாழ வைக்கும்...
வராதவர்களையும் அரியலூர்
வீடு கட்ட சிமென்ட் கொடுத்து வாழ வைக்கும்
பழகினார் பாசம் தெரியும்
பகைத்துபார் வீரம் புரியும்
ராஜேந்திர சோழன் வாழ்த மடம்..
ராஜாக்கள் வாழு;

                                       எச்சரிக்கை 


 தங்கள் வாங்கி பரிவர்த்தனைகளை அவ்வப்போது சரிபார்க்கவும். தங்களுக்கு அதில் சந்தேகம் வரும்படி ஏதேனும் இருந்தால் உடனடியாக வங்கியை தொடர்புகொண்டு கடவுச்சொல் (PASSWORD ) மற்றும் பின் (PIN ) என்னை  மாற்றவும். [@...956];

 எப்பொழுதும் வலைத்தளத்தினுள் நுழைவதற்கு (Login) முன் வலைத்தளம் விலாசத்தை சரி பார்க்கவும். ஹேக்கர்கள் தங்கள் பயனர்பெயர், கடவுச்சொல் (Password ), வங்கி கணக்கு எண் ஆகிய  முக்கியமான விவரங்களை ஒரே மாதிரி வலைத்தள பக்கங்களை உருவாக்கி திருடக்கூடும். உதாரணமாக,  Amazoon[dot]com மற்றும் Amazon[dot]com ஒரே வலைத்தள முகவரி அல்ல . பிரபல வலைத்தளம் போல கயவர்கள் இன்னொரு வலைத்தளம் உருவாக்கி தங்கள் முக்கியமான விவரங்களை திருடக்கூடும். [@...956];

                                                       மருந்துகள் 


 1. நெஞ்சு சளி

தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. தலைவலி

ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

3. தொண்டை கரகரப்பு

சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

4. தொடர் விக்கல்

நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.

5. அஜீரணம்

ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.

சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.

6. வாயு தொல்லை

வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.

7. வயிற்று வலி

வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.

8. சரும நோய்

கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.

9. மூக்கடைப்பு

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

10. கண் எரிச்சல், உடல் சூடு

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

11. வயிற்றுக் கடுப்பு

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

12. பற் கூச்சம்

புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.

13. வாய்ப் புண்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

14. தலைவலி

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

15. வயிற்றுப் பொருமல்

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

16. அஜீரணம்

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.

17. இடுப்புவலி

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

18. வியர்வை நாற்றம்

படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.

19. உடம்புவலி

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

20. ஆறாத புண்

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

21. கண் நோய்கள்

பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.

22. மலச்சிக்கல்

தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.

23. கபம்

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

24. நினைவாற்றல்

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

25. சீதபேதி

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

26. ஏப்பம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

27. பூச்சிக்கடிவலி

எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.

28. உடல் மெலிய

கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.

29. வயிற்றுப்புண்

பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

30. வயிற்றுப் போக்கு

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

31. வேனல் கட்டி

வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.

32. வேர்க்குரு

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

33. உடல் தளர்ச்சி

முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.

34. நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு

நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.

35. தாய்ப்பால் சுரக்க

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க

கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.

37. எரிச்சல் கொப்பளம்

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

38. பித்த நோய்கள்

கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.

39. கபக்கட்டு

நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.

40. நெற்றிப்புண்

நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.

41. மூக்கடைப்பு

இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.

42. ஞாபக சக்தி

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.

43. மாரடைப்பு

சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்

44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

45. கை சுளுக்கு

கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.

46. நீரிழிவு

அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.

47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்

49. உடல் வலுவலுப்பு

ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.

50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.

எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.

கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.;


                                      ஆப்பிள் தானியங்கி கார்


 ஸ்மார்ட்போன் தயாரிப்பில் பிரபலமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகவே தானியங்கி கார் தயாரிப்பில் ஆர்வமாக உள்ளது. ஆப்பிள் தானியங்கி கார் குறித்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.



ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்து வருகின்ற நிலையில் கார் தயாரிப்பிற்கு என மிகவும் ரகசியமாக தனது திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ஆப்பிள் கார் மின்சாரத்தில் இயங்கும் காராகவும் தானியங்கி முறையில் செயல்படும் காராகவும் வடிவமைக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அமெரிக்கா தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு (National Highway Traffic Safety Administration) பிரிவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு தலைவர் ஸ்டீவ் கென்னர் அனுப்பியுள்ள 5 பக்க கடிதத்தில் தானியங்கி கார் தயாரிப்பு சோதனைக்காக அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் என்னவென்றால் போர்ஷே நிறுவனத்தின் தொழிற்நுட்ப இயக்குநர் அலெக்சாண்டர் ஹிட்ஜிங்கரை தனது டெக்கனிக்கல் இயக்குநராக நியமிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லீ மென்ஸ் ரேஸ் பந்தயங்களில் அனுபவமிக்க ஹிட்ஜிங்கர் போர்ஷே நிறுவனத்தின் 919 ஹைபிரிட் ஸ்போர்ட்ஸ்கார் தயாரிப்பிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பது குறிப்படதக்கதாகும்.

கடந்த மார்ச் 2016யிலே அலெக்சாண்டர் போர்ஷே நிறுவனத்தை விட்டு விலகிவிட்டதாகவும் தற்பொழுது சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த நிறுவனத்தில் பணியாற்றுவதாக மட்டுமே அவரது லிங்க்டூஇன் பக்கத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எனவே ஆப்பிள் தானியங்கி கார் தயாரிப்பில் ஹிட்ஜிங்கர் பணியாற்றலாம் என கூறப்படுகின்றது.

ஆப்பிள் நிறுவனம் கார் தயாரிப்பில் இறங்குவது உறுதி செய்ப்பட்டுள்ளது. மேலும் கூகுள் நிறுவனம் தங்களுடைய தானியங்கி கார் நிறுவனத்துக்கு கூகுள் வேமோ என பெயரிட்டுள்ளது.;

            ட்ரு கலர் இடமிருந்து விடைபெற்று கொள்ளும் வழி   

https://www.truecaller.com/unlist

தீங்குவிளைப்பவர்கள்  தங்கள் கைபேசி எண் மற்றும்  தங்கள் பெயரை  True  Caller  மூலம் பெறலாம். இந்த தகவல் மூலம் தங்கள் பிறந்த நாள் , PAN  அட்டை எண் எளிதாக பெறலாம்.இந்த தகவல்கள்  மூலம் தங்கள் மொபைல் சேவை வழங்குநர் இடம் தங்கள் சிம் கார்டு நகல் (duplicate ) பெற்று, தங்கள் அனைத்து கடவுச்சொற்களையும்   மாற்றி அமைக்கலாம்(reset ). [@...956];

                                                       *ஏக்கம்*👆👇


_ஒருபிடி சோற்றுக்கே வழியிலா_
_ஒற்றைநாடி உயிர்கள் போராடுவது_
_கட்டுகளாய் பணத்தை அடுக்கி _
_மெத்தையாய் கொண்டு படுக்குது_
_உழைக்காமல் பிழைக்கும் கூட்டம் !_

_வரிசையில் நிற்கும்_ _வறியோருக்கு _
_இல்லை அரிசியென_ _உரைத்தவனே _
_கள்ளத்தனமாய் விற்கும்_ _நிலையும்_
_பதுக்கி வைப்பவன் பாதுகாப்புடன் _
_பக்கத்து மாநிலத்திற்கு அனுப்பிடும் _
_அவலக்காட்சி அரங்கேறுது நாளும் !_

_நோட்டைக் கொடுத்து ஓட்டும் வாங்கி _
_வழங்கும் வாக்காளர் வாய்க்கு அரிசியும் _
_இல்லாமல் தவிக்கும் மயான பூமியிது ! _
_ஏய்த்தே வாழும் கூட்டத்தின் ஆதிக்கம் _
_ஏமாளியாய் ஆக்குது ஏழை பாழைகளை !_

_சொந்தப் பணமோ செல்லாக் காசாகுது _
_பந்தப் பாசமோ கல்வெட்டுக் காலமாகுது _
_சேர்ந்து வாழ்ந்ததோ அறுந்த பட்டமாகுது _
_கல்விக் கூடமோ விற்பனை நிலையமாகுது_
_அரசியல் களமோ ஆபத்தை உருவாக்குது _
_எட்டிப் பார்க்கிற உள்ளங்கள் அழுகிறது ! _



*உங்களுக்கு பலத்த உணவு வயிறு நிறைய முட்டுகிறது *

*அவர்களுக்கு பழைய கஞ்சி வயிற்று அடியில் தட்டுகிறது *


*பணம் படைத்த  மனித இனமே!*

*கையில் எஞ்சி உள்ள பணத்தை கள்ளவழியில் போக்காமல் *

*ஏழைகளின் கண்ணீர் துடைக்கும் நல்ல வழியில் போக்குங்கள் *

*உங்களிடம் உள்ள செல்வதை ஏழைகளுக்கு அள்ளி கொடுக்க வேண்டாம்*
*கிள்ளியாச்சும் குடுங்கள் பாவம் ஏழைகளும் உயிர் வாழட்டும்.*;

             அதிநவீன போர் விமான உற்பத்தி


 🔊உலகின் அதிநவீன போர் விமான உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin). இந்தியாவில் போர் விமான உற்பத்தி ஆலை ஒன்றைத் தொடங்க அது தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.;

டிசம்பர் 23 - தேசிய விவசாயிகள் தினம்


ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23-ம் தேதி 'தேசிய விவசாயிகள் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பிறந்த நாளே கடந்த 16 ஆண்டுகளாக விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சரண் சிங்கின் பிறந்த நாளை விவசாயிகள் தினமாக கொண்டாடப்படுவதற்கு தனிப்பட்ட காரணங்கள் உண்டு.

பல்வேறு நெருக்கடியான அரசியல் சூழல்களுக்கிடையே ஜூலை 1979-ம் ஆண்டு, இந்தியாவின் 5-வது பிரதமராக பதவியேற்றார் சவுத்ரி சரண் சிங். பின்னர் 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி வரை 7 மாதங்கள் ஆட்சியில் இருந்த சரண் சிங் 'ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்ட'த்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.

அவருடைய ஆட்சியின்போதே விவசாயிகளின் விளைபொருள் விற்பனைக்காக 'வேளாண் விளைபொருள் சந்தை மசோதா'வையும் அறிமுகப்படுத்தினார். இதுதான் அவர் ஆட்சியின் போது விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட முக்கிய அம்சங்கள்.

இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம். உண்மைதான். இன்றும் இந்தியாவின் மக்கள்தொகையில் 60 சதவிகிதத்துக்கு மேலானோர் விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் விவசாயம் ஆட்சியாளர்களுக்கு முதன்மை துறையாக இல்லாதிருப்பது வருத்தத்தை அளித்து வருகிறது;



                                     ஸ்பைவேர்  ஜாக்கிரதை : 


 ஒரு வகையான மால்வேர், அது தங்கள் கணினியில்  பாதிப்பு உண்டாக்கி, முகப்பு  பக்கம் மற்றும் தங்கள் தேடல் பட்டியலில் மாற்றம் செய்து ,  தங்கள் இணைய உலாவியை (Internet  browser ) மறு கட்டமைத்து விடும்.

ஸ்பைவேர் தங்கள் கண்ணியில் keyloggers எனப் கூடும் குறிப்புகளை நிறுவி , குறிப்பிட்ட  இணை தளத்தில் உபயோகிக்கும்  பயனர்பெயர், கடவுசொல் திருடிவிடும். தங்கள் வங்கி வலைத்தளத்தில் உள் நுழையும் போதெல்லாம் அது பதிவு வைத்து கொள்ளும்.

தங்கள் கணிணியினை ஸ்பைவேரிலிருந்து பாதுகாத்து கொள்ள, Anti Spyware தங்கள் கணிணியில் நிறுவி அதை மேம்படுத்த வேண்டும்.தங்கள் வலைத்தளம் உலவும்(web surfing ) போது நிறைய கவனம் தேவை. பாதிக்கப்பட்ட வலை தளத்தை பார்க்கும் போதுதான்  ஸ்பைவேர் பாதிப்பு உண்டாகும்.

தங்கள் வலைதளத்தில் உலாவும் போது தேவையற்ற POP UP  தெரிந்தால், அதை மூட  "Agree" அல்லது "OK " கிளிக் செய்ய வேண்டாம். உண்மையில் அது தங்கள் கணிணியில் மால்வேர் நிறுவிடும். இதற்கு பதில் ALT + F4  அல்லது அந்த pop Up இல் தெரியும் சிவப்பு குறியை கிளிக் செய்து மூடவும். [@...956];



 ரேசன் கடைகளில் மார்ச் 31க்கு மேல் மின்னணு பண பரிவர்த்தனை- மத்திய அரசு

நாடு முழுவதும் மார்ச் மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published: December 23 2016, 14:36 [IST]
டெல்லி: ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்துக்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் மாதத்திற்குள் ரேஷன் கடைகளில் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளும் திட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8ம் தேதி அறிவித்தார். ஒரு மாதமாகியும் வங்கிகளில் பண தட்டுப்பாடு தீரவில்லை. பண தட்டுப்பாடு மட்டுமல்லாது சில்லரை தட்டுப்பாடும் உருவாகியுள்ளதால் தினமும் வங்கிகளில் திருவிழா போல் கூட்டம் கூடி விடுகிறது.
மக்கள் அனைவரையும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. அதற்கு முன்னதாக அரசு நிர்வாகத்தையும் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேசன் கடைகளில் குறைந்த பட்சம் 100 முதல் 200 ரூபாய் வரை மட்டுமே பொருட்கள் வாங்கப்படுகின்றன. பணத்தட்டுப்பாடு வந்த பின்னர் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் மார்ச் மாதத்துக்குள் மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 5.27 லட்சம் ரேஷன் கடைகளில் இந்த திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் எனவும் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்தார். இந்த புதிய திட்டத்தால் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேசன் கடைகளில் கரண்ட் இல்லா விட்டால் மிசின் வேலை செய்யாது என்று மூடி விடுகின்றனர். மின் தட்டுப்பாடு உள்ள தமிழகத்தில் ரேசன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்பது அந்த ஆண்டவனுக்கே;

*புகை பிடிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைக்காத கடைகளுக்கு அபராதம்* 


_அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பள்ளி கல்லூரிகளுக்கு அருகே புகைப்பிடிக்க கூடாது என எச்சரிக்கை பலகை வைக்கப்படாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது._

_ஜயங்கொண்டம் அருகே உள்ள உடையார்பாளையம்  பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் திருநாவுக்கரசு, சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், சிவா, செல்வகாந்தி, பிரவின்குமார் உள்ளிட்டவர்கள் வெள்ளிகிழமையன்று கடைகள், உணவகங்கள், டீ கடைகள் ஆகியவற்றில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பை மற்றும் கப்புகள், டீ கடைகளில் கலப்பட டீ தூள், கடைகளில் கலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுகின்றனவா என அதிரடி சோதனை நடத்தினர்._

_அப்போது புகையிலை பீடி, சிகரெட் விற்பனை செய்யும் கடைகளில் புகை பிடிக்க தடை செய்யப்பட்ட பகுதி என எச்சரிக்கை பலகை வைக்காத கடைகளுக்கும்பொது இடங்களில் புகை பிடித்தவர்களிடமிருந்தும் 2800 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது._ 

            வாட்ஸ்ப் நண்பர் ஒருவரின் மனக்குமுறல்...


🔶 இந்த அறிவிப்பால் நாடு திருந்துமா என்று தெரியாது.

🔶 இந்த அறிவிப்பால் நாட்டில் கருப்பு பணம் ஒழியுமா என்று தெரியாது.

🔶இந்த அறிவிப்பால் நாடு வளமான பாதைக்கு வருமா என்று தெரியாது.

🔶இந்த அறிவிப்பால் நாட்டில் உூழல் முற்றிலும் ஒழியுமா என்று தெரியாது.
               "ஆனால்"
🔷 என் வயிற்றில் அடித்து என்னிடம்  பிடுங்கிய உணவை நொடிப்பொழுதில் நரகல்லாக(பீயாக) மாற்றியது இந்த சாபம்!!

🔷 என் உழைப்பின் பலனை நோகாமல் அனுபவித்தவனை உலுக்கியெடுத்த உருட்டுக்கட்டை இந்த அறிவிப்பு.
🔷 1,76,000/ கோடியை அடித்த கொள்ளையர்களை அனுபவிக்க விடாமல் செய்தது இந்த அறிவிப்பு.

🔷 கண்டெய்னரில் கடத்திய பணத்தை கசக்கி போடவைத்தது இந்த அறிவிப்பு.

🔷 கரைவேட்டி கவுன்சிலர்களின் அக்கிரமத்தை அம்மணமாக்கியது இந்த அறிவிப்பு.

🔷 லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரிகளை முதன் முதலாக துங்கவிடாமல் செய்தது இந்த அறிவிப்பு.

🔷 நம்மை எவனாலும் ஒன்றுமே செய்யமுடியாது என்று நினைத்த அரசியல் தலைவர்கள், லஞ்சத்தில் கொழித்த அரசு அதிகாரிகளை நொடிப்பொழுதில் நொறுக்கியது இந்த அறிவிப்பு.

🔷 கல்லூரிகளில் சேருவதற்கு நல்ல மதிப்பெண்கள் இருந்தும் லட்ச லட்ச்சமாக டொனேஷன் வாங்கி  அப்பாவி  மாணவர்கள   படிக்கும் பருவத்திலேயே கடனாளிகளாக மாற்றிய கல்வி வியாபாரிகளுக்கு நொடியில் பாடம் புகட்டியது இந்த "படிக்காத மேதையின் "அறிவிப்பு.

🔷கலக்கத்துடன் வரும் நோயாளிகளை மேலும் கலங்க வைத்து பணத்தை ஈவு இரக்கம் பார்க்காமல் பிடுங்குகின்ற பல் நோக்கு சிறப்பு  மருத்துவமனைகளின் மருத்துவ முதலாளிகளை நொடிப்பொழுதில் பைத்தியகாரனாக்கியது இந்த அறிவிப்பு...

🔷 கூட்டணி என்ற பெயரில் மூட்டை மூட்டையாக ஆட்சியாளர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மக்களை முட்டாளாக நினைத்த அரசியல் மேதாவிகளை நொடியில் கூமுட்டையாக்கிய அறிவிப்பு.

😃 வாழ்நாளில் இவர்களுக்கு தண்டனையே கிடையாதா ஒரு "இந்தியன் "தாத்தா வரமாட்டாரா ஒரு "சிவாஜி த பாஸ் " வரமாட்டாரா என்று நினைத்த என்னைப்போன்ற சாதாரண மனிதனுக்கு நானே இந்த பணபிசாசுகளை  குமுற குமுற கதற கதற அடித்து நொறுக்கியது போல ஒரு உணர்வை ஏற்படுத்தியது இந்த அறிவிப்பு ( ஆப்பு) .

📢 உங்களுக்கு தெரியாது நண்பர்களே எங்களைப்போன்ற வியாபாரிகளை இந்த பணப்பிசாசுகள் கொத்தி கொத்தி மொத்தமாக தின்றுவிட முயன்றனர் .ஞாயமாகவும் நேர்மையான முறையில் பணம் சம்பாதித்தாலும் எங்களை மிரட்டி மிரட்டி எங்களிடம் % முறயில் பணத்தை பிடுங்கினர். உண்மையில் எங்களுக்கு இவர்களை எதிர்க்கின்ற துணிவு இல்லைதான்.

😃 சத்தியமாக சத்தம்போட்டு  சொல்கிறேன் நண்பர்களே உழைத்து சம்பாதித்த பணத்தை என்னிடமிருந்து பிடுங்கிகொண்டு ஓடியவன் என் கண் முன்னாலேயே வாகனத்தில் அடிபட்டு துடிக்க துடிக்க நரக வேதனயை அனுபவிக்கின்ற காட்சியை காண்பது போல் உள்ளது இந்த அறிவிப்பு. இவன் செத்தானா, பொழப்பானா, நொண்டியாவானா அதெல்லாம் எனக்குத்தெரியாது.என்னை கொல்ல வந்த மிருகம் அடிபட்டதை பார்க்கும் சந்தர்பம் எனக்கு கிடைத்தது. மிக மிக மகிழ்ச்சி.

  

 21 ம் நூற்றாண்டின் பென்னி குயிக் - கலெக்டர் ககன்தீப் சிங் பேடி:


நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.

ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. 2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், வணக்கத்திற்கும்  உரியவர்  #கலெக்டர்_ககன்தீப்_சிங்_பேடி  ஆவார்.

அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.

சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் #கடலூர் மாவட்டம், #நெய்வேலி அருகேயிருக்கும் #கரைமேடு கிராமத்தில் தான்.

2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது. பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன. ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் #துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது. சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது. அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும்.

நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது. இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது. எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் #ககன்தீப்_சிங்_பேடி.

சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி. அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது. ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.

வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை. எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது  #ககன்தீப்_சிங்_பேடியின் திட்டமாக இருந்தது.

ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.

தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார். ஆனால். திராவிட அரசியல் வியாதிகளோ, இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது

பொருத்து, பொருத்து பார்த்த #ககன்தீப்_சிங், வெறுத்து போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார். ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி தொல்லை காட்சிகளிலே வராது.

வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க.

ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.

பணி தொடங்கியது

ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் #துரைக்கண்ணு.

1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.

#துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :

கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது. 12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள். ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது.

ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம். ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, “ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு. எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு. கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினீயருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை. ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.

பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர். அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.

கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்ப்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார்.

இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.

திட்டத்துக்கு வித்திட்ட #ககன்தீப்_சிங்_பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார்.

தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.

இலவசங்களுக்கும், ஓட்டுக்கு நோட்டு கொடுக்கவும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்யும் திராவிடக் கட்சிகள்நீர் போன்ற வாழ்வாதார பிரச்சனையை பற்றி எப்போது கவலை படப்போகிறது?

கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிவதற்கு காரணமாக இருந்தது தமிழ், திராவிடம், ஜாதி, சிறுபான்மை, மதச்சார்பின்மை பிராமணன், சூத்திரன் என்று பேசி, பேசியே நம் மக்களை முட்டாள்களாக்கி உறவாடி சீரழித்தது திராவிடக் கட்சிகள் தானே.

மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் #ககன்தீப்_சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம். பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.

மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே.

சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களிக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு  இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வாரா நம் மக்கள்

ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
  
  

 பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (ROHYPNOL) மருந்து



பெண்களை சீரழிக்கும் ரோஹிப்னோல் (rohypnol) மருந்து
ரோஹிப்னோல் எனும் மருந்து பெண்களை அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அறியாமலேயே சீரழிக்க உதவுகிறது. சமீபத்தில் மும்பையில் மேஜிக் எனும் இரவு நேர விடுதியிலிருந்து 5 குண்டர்கள் ஒரு பெண்ணை கடத்திச் சென்று கற்பழித்து பேன்ட்ஸ்டான்ட் எனும் இடத்தில் தூக்கி எறிந்து விட்டதாக வழக்கு பதிவாகியது. பாதிப்புக்கு உள்ளான பெண்னை விசாரித்த பொழுது அவருக்கு என்ன நடந்தது என்பது சிறிதளவு கூட ஞாபகத்தில் இல்லை. பின்னர் மருத்துவ பரிசோதனை நடத்திய பொழுது அப்பெண்ணுக்கு ரேஹிப்னோல் என்னும் மருந்து கொடுத்து சீரழிக்கப்பட்டார் என்பது தெரியவந்துள்ளது.
(rohypnol) மருந்து என்றால் என்ன?
(rohypnol) மருந்து சிறிய வில்லையாக வருகிறது மேலும் இம்மருந்து பல முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்தாகும். இந்த மருந்தை உட்கொள்பவர்களுக்கு தனக்கு கடந்த 10-12 மணிக்கு முன்னால் என்ன நடந்தது என்பதே நினைவில் இருக்காது. மேலும் இதை உட்கொள்ளும் பெண்களுக்கும் கருத்தரிக்கும் வாய்ப்பே கிடையாது அதற்கு மேல் நிரந்தரமாக மலட்டுத்தன்மை அடைவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. அவ்வகையான மாத்திரை வில்லைகள் இந்தியா போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள்ää கல்லூரிகள் போன்ற இடங்களில் இளவயதினரை குறிவைத்து விற்கப்படுகிறது என்பது வருந்தத்தக்க செய்தியாகும். இவ்வகை மாத்திரைகள் சமுதாயச் சீரழிவை உண்டாக்கும் கயவர்களின் கைகளில் சிக்கியிருப்பதுதான் மிகவும் வேதனையான விசயம்.
(ROHYPNOL) மருந்து எப்படி இருக்கும் எவ்வகையைச் சார்ந்தது அடையாளம் காணமுடியுமா?
இம்மருந்து வேலியம் (Valium )மற்றும் ஜனாக்ஸ் (xanox)போன்ற தூக்க மாத்திரை வகையைச் சார்ந்தது. இவ்வகை மருந்து ஆரம;

இதுவரை பணத்தை செல்லாது என அறிவித்த பிற நாடுகளின் கதியும் அதன் அதிபர்களின் கதியும் என்னவானது என சுருக்கமாகப் பார்ப்போம் ...


1. நைஜீரியா ....
கடந்த 1984 ல் நைஜீரியாவின் அதிபர் புகாரி, பணத்தை செல்லாது என அறிவித்தார்...
அறிவித்த 30 நாட்களுக்குள் உணவு வாங்க இயலாமல் பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர் ...
பொங்கியெழுந்த நைஜீரிய மாணவர்கள், அதிபர் புகாரியை நாட்டை விட்டு அடித்துத் துரத்தினர் ...
அதன் பின்னரே நைஜீரியாவில் இயல்பு நிலை திரும்பியது ...

2- மியான்மர் என்ற பர்மா ...
கடந்த 1987 ல் பர்மிய ராணுவ அரசு இதே போல் பணத்தை செல்லாது என அறிவித்தது ...
உணவு வாங்க இயலாமல் மூன்று லட்சம் மக்கள் மடிந்தனர் ...
ஆங்சான்சூகியின் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரம் மக்களை ராணுவம் சுட்டுக் கொன்றது ...
தற்போது ஆங்சான் சூகி பர்மிய ஆட்சியைக் கைப்பற்றி வென்ற பின்னரே இயல்பு நிலை திரும்பியது ...

3- ரிபப்ளிக் ஆப் கானா ...
கடந்த 1982 ல் இதே போல் பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டவுடன்,மக்கள் வங்கிகளை சூறையாடினர் ...
இறுதியில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்த பின்னே இயல்பு நிலை திரும்பியது ...

4- சையர் நாடு ...
கடந்த 1997 ல் சர்வாதிகாரி மொகுடு பணம் செல்லாது என அறிவித்தார் ...
இந்த அறிவிப்பின் பிண்ணனியில் அமெரிக்க சதி இருந்தது ...
சையர் நாட்டு மக்களால் சர்வாதிகாரி மொகுடு நாட்டை விட்டு அடித்துத் துரத்தப்பட்டார் ...
பின்னர்தான் சையர் நாட்டில் இயல்பு நிலை திரும்பியது ....

5- வடகொரியா ...
வடகொரியாவின் அற்புதமான தலைவர் திரு கிம் கடந்த 2010 ல் இதே போல் பணம் செல்லாது என அறிவித்தார் ...
பின்,இதன் பிண்ணனியில் அமெரிக்க சதி இருப்பதை உணர்ந்து, தவறான ஆலோசனை கூறிய நிதி அமைச்சர் மற்றும் 13 நிதி அமைச்சக ஊழியர்களுக்கும் மரணதண்டனை நிறைவேற்றினார் ...
மேலும் ஒவ்வொரு குடிமகன் வீட்டிற்கும் மன்னிப்புக் கடிதமும்,பரிசுப் பொருளும் அனுப்பினார் ...
இயல்பு நிலை திரும்பி வடகொரியா வல்லரசானது ...

6- சோவியத் யூனியன் (USSR)
கடந்த 1990 ல் ,சோவியத்தின் அதிபர் கார்ப்பசேவ் பணத்தை செல்லாது என அறிவித்தார் ...
உடனடியாக கலவரம் மூண்டு சோவியத் நாடு பல நாடுகளாக உடைந்தது ...
கார்ப்சேவ் அதிபர் பதவியிலிருந்து விரட்டப்பட்டார் ...
உடைந்த சோவியத் நாட்டிலிருந்துதான் இன்றைய ரஷ்யா என்ற தனிநாடு வல்லரசாகத் திகழ்கின்றது ...

ஆக,பணத்தை செல்லாது என அறிவித்த எல்லா அரசுகளும் பதவியிலிருந்து அகற்றப்பட்டு,அதன் அதிபர்கள் நாட்டை விட்டே விரட்டப்பட்டுள்ளனர், என்பதுதான் வரலாறு ....

வரலாற்றைப் புரிந்து கொள்ளாத தலைவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள் என்பதுதான் உண்மை ....

வரலாறு முக்கியம் அமைச்சரே ....;

                                 செல்போன் சிக்னல்கள் டிப்ஸ்


நாம் மொபைல் டேட்டாவை ஆன் செய்தவுடன் *2G, E, 3G, H* என Symbol வருவதைப் பார்த்திருப்போம்.
இவற்றைப் பற்றி ஒரு சிறிய கண்ணோட்டம்😊.


      *'2G'* இது 2G நெட்வொர்க் இண்டர்நெட் *GPRS (General Packet Radio Service)* கனெக்ட் செய்ததற்கான Symbol இதன் வேகம் மிக மிக குறைவாகவே இருக்கும்.
இதை 2000 - 09 ஆண்டுகளில் அதிகம் பயன்படுத்தியிருக்கிறோம்.  இதன் மூலம் நீங்கள் 1GB டேட்டாவை டவுன்லோன் செய்ய மற்றும் அனுப்ப *165 மணி* நேரம் பிடிக்கும்😳.


      2G- *'E'* இதுவும் 2G (2.5G) *EDGE (Enhanced Data Access for GSM Evolution)* மொபைல் இண்டர்நெட் ஆகும். 2008 ம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. இதன் மூலம்1GB டேட்டாவை டவுன்லோட் செய்ய 44GB மணி நேரமும், அனுப்ப 89 மணி நேரமும் ஆகும்.  இந்த 'E' பயன்பாடு தான் இந்தியாவில் பெறும்பாலானோர் பயன்படுத்துகின்றர்.


      '3G' இது 3G மொபைல் இண்டர்நெட் *UMTS (Universe Mobile Telecom System)* கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.
இது இயங்க அவசியம் 3G  இயங்குதள வசதியுடைய மொபைல் தேவை. இதன் மூலம்1GB டேட்டாவை டவுன்லோட் செய்ய 6 மணி நேரமும், அனுப்ப 18 மணி நேரமும் ஆகும்.


      Symbol 'H' -  இது 3G மொபைல் இண்டர்நெட் *HSPA (High Speed Packet Access)* கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி.   இதை ஸ்மார்ட் போன் கருவிகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இதன் மூலம் *1GB டேட்டாவை டவுன்லோட் செய்ய 25 நிமிடமும்*, அனுப்ப 45 நிமிடமும் ஆகும்.


      Symbol *H+*  - இது 3G மொபைல் இண்டர்நெட் *(Evolution High Speed Packet Access)* கனெக்ட் செய்வதன் மூலம் தோன்றும் குறி. இதில் 1GB டேட்டாவை டவுன்லோடு செய்ய 5 முதல் 20 நிமிடங்களும், அனுப்ப 15 முதல் 40 நிமிடங்களும் ஆகும்.


      *'4G'* இச்சேவை 4G நெட்வொர்க் இண்டர்நெட் -  *LTE (Long Term Evolution)*. இதன் வேகம் மிக மிக அதிகம். இது 4G இயங்குதள  மொபைல் அவசியம். இதன் மூலம்1GB டேட்டாவை டவுன்லோட் செய்ய 3 நிமிடமும், அனுப்ப 5 நிமிடமும் ஆகிறது.

  

                                யார் ஏழை  ❓❓❓


🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண்
வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..

இதில் யார்_பணக்காரர்...❓❗

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா,

🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற ,
பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால் ,
ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு
என்று டீ கடைக்காரரிடம் கேட்க,

டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பவனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....
நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗

 பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன. ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.
👇👇👇👇👇👇👇👇👇👇


 638 முறை கொலை முயற்சிகளிலிருந்து தப்பித்த பிடல் காஸ்ட்ரோ!


உலக அளவில் முதலாளித்துவ கொள்கைகளுக்கு எதிராக கம்யூனிசக் கொள்கை என்னும் பொதுவுடமை கொள்கை கார்ல் மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. கம்யூனிசக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்தான் இன்றைய தினத்தின் நாயகன் பிடல் காஸ்ட்ரோ.
யார் இந்த பிடல் காஸ்ட்ரோ?
ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி 1926ம் ஆண்டு கியூபாவில் ஒரு செல்வ செழிப்பான விவசாய தந்தைக்கு பிறந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ. இவர் என்ன தான் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கியூப மக்களின் அடிமை நிலையை கண்டு தனது வசதியான வாழ்க்கையை விட்டுவிட்டு கியூபாவின் மக்களுக்காக அமெரிக்கா என்னும் மிகப்பெரிய ஏகாதிபத்திய நாட்டை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.
அமெரிக்கா, அதுவென்ன அவ்வளவு சாதாரண வார்த்தையா? உலகில் உள்ள பெருமுதலாளிகள் அனைவருக்கும் ஒரு மந்திரச் சொல்லாக இருப்பது தான் அமெரிக்கா. இருபதாம் நூற்றாண்டின் வல்லரசு நாடாக திகழ்ந்த அமெரிக்கா உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடிவு செய்தது. ஆனால் கியூபாவில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை. அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்தான் பிடல் காஸ்ட்ரோ.
அமெரிக்காவும் பிடல் காஸ்ட்ரோவும்:
அமெரிக்கா தனது ஏகாதிபத்திய கொள்கையின் மூலம் கியூபாவிலும் அதனுடைய கொடியை நாட்டியிருந்தது. ஆனால் அமெரிக்காவால் அங்கு நெடுங்காலம் நிலைத்து நிற்கமுடியவில்லை. அமெரிக்காவின் பல பெரு முதலாளிகள் கியூபாவில் கால்பதித்து கியூபா நாட்டு அரசின் துணையுடன் அங்கு தொழில் செய்து கியூபா நாட்டு மக்களையும் அதன் செல்வத்தையும் சுரண்டிக்கொண்டிருந்தனர்.
இதனைக் கண்டு கொதித்தெழுந்த பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் அரசிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். அவர் தனது போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தேர்ந்தெடுத்த கொள்கைதான் கம்யூனிசம். பிடல் காஸ்ட்ரோ கல்லூரி படிக்கும்பொழுதே கம்யூனிச கட்சியில் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றார்.
அவரது தொடர் போராட்டத்தின் விளைவாக 1959ம் ஆண்டு புல்ஜென்சியோ பாட்டிட்ஸ்டாவின் ஆட்சியை வீழ்த்தி தலைமை அமைச்சராக பொறுப்பேற்றார். 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல் 2008ம் ஆண்டு வரை கியூபாவின் ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.
இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது. முதலில் காஸ்ட்ரோவை அமெரிக்கா தனது பக்கம் இழுக்க நினைத்து திட்டங்களை தீட்டியது. ஆனால் அதனுடைய திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. கியூபாவின் வளங்கள் அனைத்தும் கியூபா மக்களுக்கே சொந்தம் என காஸ்ட்ரோ அறிவித்தார். மேலும் கியூபாவில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தையும் பொதுவுடைமையாக அறிவித்தார் காஸ்ட்ரோ அதனால் கடும் கோபம் கொண்ட அமெரிக்கா கியூபாவின் மீது பொருளாதார தடை விதித்தது.
கியூபாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் கியூபாவிலேயே தேங்கும் நிலை ஏற்பட்டது. அப்பொழுது பிடல் காஸ்ட்ரோவுக்கு கை கொடுத்தது ரஷ்யா தான். கியூபாவின் பொருட்களை ரஷ்யா இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்டது. மேலும் கியூபா மக்களும் தங்கள் நாட்டிற்காக கடுமையாக உழைத்தனர்.
இதனால் அமெரிக்க நிறுவனக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன. எனவே காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்காவின் சிஐஏ அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. ஒருமுறை இரண்டு முறை அல்ல மொத்தம் 638 முறை பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய திட்டமிட்டு அமெரிக்கா தோல்வியை தழுவியது.
பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய அமெரிக்கா சதி திட்டம் தீட்டியதை பிரிடிஷ் ஊடகமான Channel 4 ஆவணப்படமாக வெளியிட்டது. அந்த ஆவணப்படத்திற்கு “பிடல் காஸ்ட்ரோவை கொல்ல 638 வழிகள்” என்ற தலைப்பையே வைத்தது. அதில் முக்கியமானவை, பிடல் காஸ்ட்ரோவுக்கு விஷம் கொடுப்பது, ரசாயனம் தெளிப்பது, குண்டு போடுவது, துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது, சுருட்டில் விஷம் தடவுவது, விபத்து ஏற்படுத்துவது, விஷ மாத்திரை கொடுப்பது என பல முயற்சிகளை மேற்கொண்டது. பிடல் காஸ்ட்ரோவை கியூபாவில் உள்ள மாஃபியா கும்பலை வைத்து கொல்ல அமெரிக்கா முடிவு செய்தது. ஆனால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இந்த திட்டங்கள் குறித்த செய்திகள் எல்லாம் சிஐஏ வின் தணிக்கை பிரிவில் இடம்பெற்றுள்ளது.
பிடல் காஸ்ட்ரோவை கொல்ல மேற்கொண்ட சூழ்ச்சிகள்:
இந்த ஆவணங்களின்படி, காஸ்ட்ரோவைக் கொலை செய்ய வேண்டும் என்பது சி.ஐ.ஏ.வின் நோக்கமாக முதலில் இருக்கவில்லை. மக்களிடம் அவருக்குள்ள நற்பெயரைக் களங்கப்படுத்தும் முயற்சியே முதலில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
உதாரணமாக தாடிக்காரர், விலங்குகளின் முடியைத் தாடியாகக் கொண்டவர் என்பது மாதிரியான கேலி வார்த்தைகளை அதிகமாகக் கசிய விட்டிருக்கிறார்கள். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் வரை குறிப்பாக அந்த ஆண்டின் பிற்பகுதியில் காஸ்ட்ரோவின் பேச்சுக்களைத் திரிக்கும் வேலையில் சி.ஐ.ஏ. இறங்கியிருக்கிறது.
தனது திட்டங்களையும், செயலையும் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த அவ்வப்போது ரேடியோவில் காஸ்ட்ரோ உரையாற்றுவார். அப்போது அவர் பேசும் மைக்கில் ரசாயன பவுடரைத் தெளிக்கலாமா என்று யோசித்ததாக உயரதிகாரிக்கு அனுப்பிய செய்திக் குறிப்பில் ஒரு சி.ஐ.ஏ. அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அது யோசனையுடன் நின்றுவிட்டது.
அதேபோல் உரை நிகழ்த்துவதற்கு முன் சுருட்டுப் பிடிப்பது காஸ்ட்ரோவின் வழக்கம். அப்போது அவருக்கு விஷ சுருட்டு கொடுக்கலாமா என்றும் முயற்சி செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் உச்சமாக காஸ்ட்ரோ அணியும் சூவுக்குள் நச்சு ரசாயனத்தைத் தெளிக்கலாமா என ஒரு சி.ஐ.ஏ. ஏஜென்ட் யோசித்திருக்கிறார். குறிப்பாக வெளிநாடுகளுக்கு காஸ்ட்ரோ சுற்றுப்பயணம் செய்யும்போது, ஹோட்டல் சிப்பந்தி மூலம் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முயற்சி நடந்துள்ளது. ஆனால், இதுவும் நிறைவேறவில்லை.
இதன் தொடர்ச்சியாக விபத்து மூலமாக கியூபாவில் உள்ள முக்கியமான மூன்று தலைவர்களை அழிக்க முடியுமா என 1960களில் சி.ஐ.ஏ. முயற்சி செய்துள்ளது. முன்னோட்டமாக காஸ்ட்ரோவை கொல்ல திட்டம் வகுக்கப்பட்டது. கடன் தொல்லையால் அவதிப்பட்ட ஒரு கியூப குடிமகனை இந்தத் திட்டத்துக்கு தேர்ந்தெடுத்தார்கள். பல கட்ட மூளைச்சலவைக்குப் பின் குடும்பச் சூழ்நிலைக்காக கார் மூலம் விபத்து ஏற்படுத்த அந்த கியூபன் ஒப்புக் கொண்டான். ஆனால், இந்தத் திட்டம் செயல் வடிவம் பெறவில்லை.
இதே காலகட்டத்தில் சி.ஐ.ஏ.வின் மருத்துவ பிரிவு 1960 ஆம் வருடம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி, விஷ சுருட்டுகள் அடங்கிய பெட்டியை சி.ஐ.ஏ. ஏஜென்டிடம் கொடுத்துள்ளது. அதில் உள்ள எந்தச் சுருட்டை எடுத்து காஸ்ட்ரோ தன் உதடுகளில் வைத்தாலும் உடனே மரணம் நிகழும். அந்தளவு சக்தி வாய்ந்த அந்த ரசாயன சுருட்டுப் பெட்டி, காஸ்ட்ரோவிடம் போய்ச் சேர்ந்ததா என்பதற்கான குறிப்பு இந்தத் தணிக்கை செய்யப்பட்ட ஆவணங்களில் இல்லை.
இதுதவிர, காஸ்ட்ரோவுக்கு விஷ மாத்திரை கொடுக்கலாமா என்றும் கூட சி.ஐ.ஏ. பரிசீலித்திருக்கிறது. ஆனால், இந்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. 1963 ஆம் ஆண்டு தொடக்கத்தில் டாஸ்க் போர்ஸ் மூலமாக காஸ்ட்ரோவை அழிக்க முடியுமா என சி.ஐ.ஏ. உயர்மட்ட குழு விவாதித்திருக்கிறது.
இதற்கெல்லாம் முடி சூட்டுவது போல ஒரு முயற்சியை சிஐஏ தீட்டியது, அதுதான் பிடல் காஸ்ட்ரோவின் காதலியை வைத்தே பிடல் காஸ்ட்ரோவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தது. அதற்கு பிடல் காஸ்ட்ரோவின் காதலியும் சம்மதம் தெரிவித்தார். பிடல் காஸ்ட்ரோவுடன் இருக்கும்போது அவரது காதலி பிடல் காஸ்ட்ரோ பயன்படுத்து நறுமணப் பொருளில் பயங்கர நச்சு கலந்த விஷத்தை கலந்து வைத்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். தனது காதலியின் சூழ்ச்சியை அறிந்த பிடல் காஸ்ட்ரோ அவரை அழைத்து தனது துப்பாக்கியை அவரிடம் கொடுத்து அவரை சுட சொன்னார். ஆனால் பிடல் காஸ்ட்ரோவின் காதலியோ மனம் உருகி அழுது தன்னால் பிடல் காஸ்ட்ரோவை கொல்ல முடியாது என கூறினார்.
இப்படி பல முறை அமெரிக்காவின் சிஐஏ பிடல் காஸ்ட்ரோவை கொலை செய்ய முயற்சி செய்தாலும் இன்று வரை அவரை யாராலும் ஒன்று செய்ய முடியவில்லை.;


           குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவுகள்



1) குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பும் அவற்றின் அதிகாரங்களும் பற்றி

(constitution of criminal courts and their powers)

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 6-35 ] கூறுகிறது.


2) நபர்களை கைதுசெய்தல் (arrest of persons) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 41-60 ] கூறுகிறது.



3) ஆஜராவதை கட்டாயப்படுத்தும் நீதிமுறை கட்டளைகள்

(process to compel appearance) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 61-69 ] கூறுகிறது.


4) கைது செய்வதற்கான பிடியாணை

(warrant of arrest) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 70-81 ] கூறுகிறது.


5) பகிரங்க அறிவிப்பு மற்றும் ஜப்தி

(proclamation and attachment) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 82-86 ] கூறுகிறது.


6) பொருட்களை தாக்கல் செய்வதற்கான அழைப்பாணை

(summons to produce) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 91-92 ] கூறுகிறது.


7) பொருட்களை தாக்கல் செய்வதற்கான சோதனை பிடியாணை

(search warrant) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 93-101 ] கூறுகிறது.


8) அமைதியை காப்பதற்கும் நன்னடத்தைக்குமான பிணையம்

(security for keeping the peace and good behaviour) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 106-124 ] கூறுகிறது.


9) மனைவிமார்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்குண்டான

வாழ்க்கைப் பொருளுதவிக்கான உத்திரவு (order for maintance of wives,

children and parents) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 125-128 ] கூறுகிறது.


10) பொது ஒழுங்கு மற்றும் அமைதியை பேணிக்காத்தல்

(maintenance of public order and tranquility) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 129-148 ] கூறுகிறது.



  :சட்ட விரோதமான கூட்டங்கள் (unlawful assemblies) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 129-132 ] கூறுகிறது.


  :பொதுத்தொல்லைகள் (public nuisance) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 133-143 ] கூறுகிறது.



  :தொல்லை மற்றும் எதிர்னோக்கப்பட்ட அபாயம் குறித்த அவசரமான

சூழ்நிலைகள் (urgent cases of nuisance or apprehended danger) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 144 ] கூறுகிறது.


 :அசையாச்சொத்து குறித்து தகராறுகள்

(disputes as to improvable Property) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 145-148 ] கூறுகிறது.



11) காவல் துறையினரின் தடுப்பு நடவடிக்கை

(preventive action of the police) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 149-153 ] கூறுகிறது.


12) காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தலும், புலனாய்வு

செய்வதற்கு அவர்களுக்குள்ள அதிகாரங்களும்

(information to the police and their powers to investicate) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 154-176 ] கூறுகிறது.


13) விசாரணை மற்றும் வழக்கு விசாரணைகளில் குற்றவியல்

நீதிமன்றங்களுக்குள்ள அதிகாரவரம்பு (Jurisdiction of the criminal courts in

inquiries and trials) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 177-189 ] கூறுகிறது.


14) நடவடிக்கைகளை தொடங்குவதற்கு முன் தேவைப்படும் நிபந்தனைகள்

(conditions requisite for initiation of proceedings)பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 190-199 ] கூறுகிறது.


15) குற்றவியல் துறை நடுவர்களிடம் குற்ற முறையீடு செய்தல்

(complaints to magistrates) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 200-230 ] கூறுகிறது.


16) குற்றவியல் துறை நடுவர்கள் முன்பு நடவடிக்கைகளை தொடங்குதல்

(commencement of proceedings before megistrate) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 204-210 ] கூறுகிறது.


17) குற்றச்சாட்டுகளின் படிவம் (form of charges) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 211-217 ] கூறுகிறது.


18) குற்றச்சாட்டுகளின் சேர்கை (jointer of charges) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 218-224 ] கூறுகிறது.


19) செஷன்ஸ் நீதிமன்ற்த்தின் முன்பு வழக்கு விசாரணை

(trial before a court of session) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 225-237 ] கூறுகிறது.


20) பிடியாணை வழக்குகளை மாஜிஸ்ட்ரேட்கள் வழக்கு

விசாரணை செய்தல் (trial of warrant cases by magistrate) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 238-250 ] கூறுகிறது.


21) அழைப்பாணை வழக்குகளை மாஜிஸ்ட்ரேட்கள் வழக்கு

விசாரணை செய்தல் (trial of summons cases by magistrate) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 251-259 ] கூறுகிறது.


22) சுருக்குமுறை விசாரணை (summary trial) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 260-265 ] கூறுகிறது.


23) சாட்சியம் எடுப்பதற்கும் அதனை பதிவு செய்வதற்குமான

நடைமுறை (mode of taking and recording evidence) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 272-283 ] கூறுகிறது.


24) சாட்சிகளை விசாரிக்க ஆணை கட்டளைகள் (commissions

for the examinations of witnesses) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 284-290 ] கூறுகிறது.


25) சாட்சியம் குறித்த சிறப்பு விதிகள் (special rules of evidence) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 291-299 ] கூறுகிறது.


26) விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் குறித்த பொதுவான

வகைமுறைகள் (general provisions as to inquiries and trials) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 300-327 ] கூறுகிறது.


27) புத்திசுவாதீனம் இல்லாத குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் பற்றி

வகைமுறைகள் (provisions as to accused persons of unsound mind) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 328-339 ] கூறுகிறது.


28) தீர்ப்பு (the judgement) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 253-365 ] கூறுகிறது.


29) மேல்முறையீடுகள் (appeals) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 272-394 ] கூறுகிறது.


30) மேல்முடிவிற்கு அனுப்புதலும் சீராய்வும் (reference and revision) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 395-405 ] கூறுகிறது.


31) குற்ற வழக்குகளை மாற்றம் செய்தல் (transefer of criminal cases) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 406-412 ] கூறுகிறது.


32) தண்டனைகளை நிறைவேற்றுதல் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல்

குறைத்தல் மற்றும் மாற்றுதல் (execution suspension remission and commutation

of sentences) பற்றி குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 413-435 ] கூறுகிறது.


33) பிணையங்கள் மற்றும் பிணைபத்திரங்கள் குறித்த வகைமுறைகள்

(provisions as to bail and bonds) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 436-450 ] கூறுகிறது.


34) சொத்துக்கு வகை செய்தல் (disposal of property) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 451-459 ] கூறுகிறது.


35) முறைகேடான நடவடிக்கைகள் (irregular proceedings) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 460-466 ] கூறுகிறது.


36) சில குற்றங்களை புலன் கொள்வதற்கான கால வரம்பு

(limitation for taking cognizance of cetain offences) பற்றி

குற்றவியல் நடைமுறைச் சட்டம் [ sec 467-473 ] கூறுகிறது.




No comments:

Post a Comment